Saturday, July 4, 2009

முழிச்சுகிட்ட மனைவி... மாட்ட பார்த்த பிரபுதேவா!


லவ் பண்ணி கல்யாணம் செய்து கொண்ட நிறைய சினிமா ஜோடிகளுக்கு இப்போதைய உடனடி தேவை, நாடோடிகள் க்ளைமாக்ஸ்தான் போலிருக்கிறது. ஒரே ஃபிளைட்டில் ஹனிமூனுக்கு போகிற அநேக சினிமா ஜோடிகள், திரும்பி வரும்போது வெவ்வேறு ஃபிளைட்டில் வருவது நம்ம கோடம்பாக்கத்தில்தான்.

பிரகாஷ்ராஜ்-லலிதகுமாரி, ரமலத்-பிரபுதேவா காதல் திருமணம்தான் இப்போது டாப் 10 பிரச்சனைகளில் ஒன்றாக இருக்கிறது. நயன்தாராவுடன் லவ். கல்யாணமே முடிந்துவிட்டது என்றெல்லாம் கிசுகிசுக்கப்பட்டாலும், பிரபுதேவாவை விடாமல் இறுக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறாராம் ரமலத். இதற்கு பிரபுதேவாவின் அப்பா டான்ஸ் மாஸ்டர் சுந்தரமும் சப்போர்ட் என்கிறது இன்னொரு தகவல்.


கடந்த வாரம் ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார் பிரபுதேவா. நிர்வாகத்திடம் சொல்லி, “அப்படியே நயன்தாராவையும் கூப்பிடுங்களேன்” என்றாராம். சேனல் தரப்பிலிருந்து அழைப்பு போனது. வரவும் தயாரானார் நயன்தாரா. எப்படியோ விஷயம் ரமலத்துக்கு தெரியவர, பிரபுதேவா கிளம்பும்போது “நானும் வரேன்” என்று கிளம்பினாராம் ரமலத். அவ்வளவுதான். பயங்கர அதிர்ச்சி பிரபுதேவாவுக்கு.


நிகழ்ச்சிக்கு வர வேண்டாம் என்று நயன்தாராவுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி எஸ்கேப் ஆனாராம் பிரச்சனையிலிருந்து! உஸ்...அப்பாடி!

ரமலத்துடன் நயன்தாரா பேச்சு!


நயன்தாராவை பற்றி கிசுகிசுவோ செய்திகளோ இல்லாமல் சூரியன் விடிவதே இல்லை. அந்தளவுக்கு மீடியா லேடி ஆகிவிட்டார் நயன். பிட்டுக்கு மண் சுமந்த சிவன் மாதிரி பிட்டுக்கு நயன் சுமக்கிறார்கள் அநேக சுதந்திர நிருபர்கள். (ஃப்ரீ லேன்சர்ஸ்) பிரச்சனையே இவங்களாலதான் என்று நறநறக்கிறாராம் நயன். எதையாவது எழுதி பரபரப்பை கிளப்பிவிட்டுடுறாங்க. நேரடியா நம்மை சந்திக்கிற நிருபர்களுக்கும் இந்த கிசுகிசுக்களுக்கும் சம்பந்தமே இல்லை என்பது நயனின் சமீபத்திய வருத்தம். இதையும் ஒரு பிட்டா எழுதுவீங்களாங்ணா...?

நயன்தாரா பற்றி இன்னொரு செய்தி. திடீரென்று ஒரு நாள் திருமதி பிரபுதேவாவுக்கு போன் வந்ததாம். போனை எடுத்த ரமலத்துக்கு பெருத்த கோபம், சந்தோஷம், துக்கம் எல்லாமே! "உங்க கணவரை நான் உங்ககிட்டேயிருந்து பிரிச்சிடுவேன்னு நினைக்காதீங்க. அப்படி ஒரு எண்ணம் எனக்கு இல்லவே இல்லை. நீங்க தைரியமா இருக்கலாம். இதுபற்றி இனிமே குழப்பிக்க வேண்டாம்" என்று கூறினாராம்.


கேட்கவே சந்தோஷமா இருக்கே? (அவுங்களுக்கு) இன்னொரு மேட்டர். துபாயில் இருக்கும் தனது அண்ணனை அறிமுகப்படுத்த பிரபுதேவாவோடு போயிருந்தார் அல்லவா? அதே நாளில் துபாயில்தான் இருந்தார் சிம்பு. இவர் அங்கு வந்திருப்பதை கடைசி நேரத்தில் தெரிந்து கொண்ட நயன், சிக்கல் சிங்கிளா வந்திரப்போவுதோன்னு நினைத்தாராம். ஆனால் அஞ்சினாரில்லை.


எரிநட்சத்திரம் மேலே விழுந்தாலும் எடுத்து போட்டுட்டு போறதுதானே காதல்?