Saturday, July 4, 2009

முழிச்சுகிட்ட மனைவி... மாட்ட பார்த்த பிரபுதேவா!


லவ் பண்ணி கல்யாணம் செய்து கொண்ட நிறைய சினிமா ஜோடிகளுக்கு இப்போதைய உடனடி தேவை, நாடோடிகள் க்ளைமாக்ஸ்தான் போலிருக்கிறது. ஒரே ஃபிளைட்டில் ஹனிமூனுக்கு போகிற அநேக சினிமா ஜோடிகள், திரும்பி வரும்போது வெவ்வேறு ஃபிளைட்டில் வருவது நம்ம கோடம்பாக்கத்தில்தான்.

பிரகாஷ்ராஜ்-லலிதகுமாரி, ரமலத்-பிரபுதேவா காதல் திருமணம்தான் இப்போது டாப் 10 பிரச்சனைகளில் ஒன்றாக இருக்கிறது. நயன்தாராவுடன் லவ். கல்யாணமே முடிந்துவிட்டது என்றெல்லாம் கிசுகிசுக்கப்பட்டாலும், பிரபுதேவாவை விடாமல் இறுக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறாராம் ரமலத். இதற்கு பிரபுதேவாவின் அப்பா டான்ஸ் மாஸ்டர் சுந்தரமும் சப்போர்ட் என்கிறது இன்னொரு தகவல்.


கடந்த வாரம் ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார் பிரபுதேவா. நிர்வாகத்திடம் சொல்லி, “அப்படியே நயன்தாராவையும் கூப்பிடுங்களேன்” என்றாராம். சேனல் தரப்பிலிருந்து அழைப்பு போனது. வரவும் தயாரானார் நயன்தாரா. எப்படியோ விஷயம் ரமலத்துக்கு தெரியவர, பிரபுதேவா கிளம்பும்போது “நானும் வரேன்” என்று கிளம்பினாராம் ரமலத். அவ்வளவுதான். பயங்கர அதிர்ச்சி பிரபுதேவாவுக்கு.


நிகழ்ச்சிக்கு வர வேண்டாம் என்று நயன்தாராவுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி எஸ்கேப் ஆனாராம் பிரச்சனையிலிருந்து! உஸ்...அப்பாடி!

ரமலத்துடன் நயன்தாரா பேச்சு!


நயன்தாராவை பற்றி கிசுகிசுவோ செய்திகளோ இல்லாமல் சூரியன் விடிவதே இல்லை. அந்தளவுக்கு மீடியா லேடி ஆகிவிட்டார் நயன். பிட்டுக்கு மண் சுமந்த சிவன் மாதிரி பிட்டுக்கு நயன் சுமக்கிறார்கள் அநேக சுதந்திர நிருபர்கள். (ஃப்ரீ லேன்சர்ஸ்) பிரச்சனையே இவங்களாலதான் என்று நறநறக்கிறாராம் நயன். எதையாவது எழுதி பரபரப்பை கிளப்பிவிட்டுடுறாங்க. நேரடியா நம்மை சந்திக்கிற நிருபர்களுக்கும் இந்த கிசுகிசுக்களுக்கும் சம்பந்தமே இல்லை என்பது நயனின் சமீபத்திய வருத்தம். இதையும் ஒரு பிட்டா எழுதுவீங்களாங்ணா...?

நயன்தாரா பற்றி இன்னொரு செய்தி. திடீரென்று ஒரு நாள் திருமதி பிரபுதேவாவுக்கு போன் வந்ததாம். போனை எடுத்த ரமலத்துக்கு பெருத்த கோபம், சந்தோஷம், துக்கம் எல்லாமே! "உங்க கணவரை நான் உங்ககிட்டேயிருந்து பிரிச்சிடுவேன்னு நினைக்காதீங்க. அப்படி ஒரு எண்ணம் எனக்கு இல்லவே இல்லை. நீங்க தைரியமா இருக்கலாம். இதுபற்றி இனிமே குழப்பிக்க வேண்டாம்" என்று கூறினாராம்.


கேட்கவே சந்தோஷமா இருக்கே? (அவுங்களுக்கு) இன்னொரு மேட்டர். துபாயில் இருக்கும் தனது அண்ணனை அறிமுகப்படுத்த பிரபுதேவாவோடு போயிருந்தார் அல்லவா? அதே நாளில் துபாயில்தான் இருந்தார் சிம்பு. இவர் அங்கு வந்திருப்பதை கடைசி நேரத்தில் தெரிந்து கொண்ட நயன், சிக்கல் சிங்கிளா வந்திரப்போவுதோன்னு நினைத்தாராம். ஆனால் அஞ்சினாரில்லை.


எரிநட்சத்திரம் மேலே விழுந்தாலும் எடுத்து போட்டுட்டு போறதுதானே காதல்?

Sunday, June 21, 2009

அவசர மீனாட்சி... அட்வான்ஸ் இருக்கா?


கற்றார்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு இருக்கலாம். நடிகைகளுக்கு? பொறுப்பு இல்லை, அதனால் சிறப்பும் இல்லை! வடபழனியில் உள்ள ஒரு மூன்று நட்சத்திர ஓட்டலில்தான் தங்கியிருப்பார் மீனாட்சி. அடிக்கடி அவரை தேடி அஜ்மல் வருவதால், இனிமே இங்கே இடம் இல்லை என்று கூறிவிட்டார்களாம். வேறு வழியில்லாமல் அதே பகுதியில் இருக்கும் ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு போனார் மீனாட்சி. அங்கேயும் அஜ்மலின் விசிட். வந்தோமா, பார்த்தோமா என்றில்லாமல், ஃபுளோருக்கே கேட்கிற மாதிரி இருவரும் சிரிப்பதும், ஏடா கூட போஸ்களில் வெளியே வருவதுமாக ஒரே ஏ சமாச்சாரங்களாம். அங்கேயும் இடத்தை காலி பண்ண சொல்லிவிட்டார்கள்.

இப்போது தி.நகர் பகுதியில் இருக்கும் ஒரு நட்சத்திர ஓட்டலுக்கு வந்துவிட்டார் மீனாட்சி. நல்லவேளையாக இங்கே பிரச்சனை ஏதும் இல்லை என்கிறார்கள். கையில் எந்த படமும் இல்லாமல் சென்னையில் தங்கியிருக்கும் மீனாட்சி, தீவிர பட வேட்டையில் ஈடுபட்டிருக்கிறாராம்.
பொதுவாக படப்பிடிப்பு என்றால் சொந்த செலவு அவசியப்படாது.


எல்லாவற்றையும் தயாரிப்பு நிறுவனம் பார்த்துக் கொள்ளும். இப்போது மீனாட்சியின் பயணம், சொந்த பயணமாக அமைந்திருப்பதால், கையிருப்பு கரைந்து கொண்டே இருக்கிறதாம். அதற்குள் அட்வான்ஸ் வாங்கிவிட வேண்டும் என்று தவிக்கிறார். ஐடியா இருப்பவர்கள் எந்நேரமும் கதவை தட்டி கதை சொல்லலாம். போறீங்களா பாஸ்...

கமல் இயக்கப் போகும் குறும்படம்!


தியரியாக படிப்பதை விட, பிராக்டிகலாக எடுப்பதுதான் புத்திசாலித்தனம் என்பது, அறிவுசால் கமலுக்கு தெரியாதா என்ன? ஸ்கிரீன் ரைட்டிங் பயிற்சி கொடுத்ததோடு நில்லாமல், அங்கு பயின்ற மாணவர்களுக்கு குறும்படம் இயக்குகிற வாய்ப்பையும் கொடுக்கப் போகிறாராம். இந்த குறும்படத்திற்கான செலவை கமலின் ராஜ்கமல் நிறுவனமே ஏற்றுக் கொள்ளப் போகிறது.

பிரஞ்ச் நாட்டை திரைக்கதை ஆசிரியர் ஜீன் கிளாட் கேரீர் முன்னிலையில் இந்த சந்தோஷ தகவலை தெரிவித்தார் கமல். சென்னையை பற்றியதாக இருக்குமாம் இந்த குறும்படங்கள். சுமார் 250 பேர் இந்த பயிற்சியில் கலந்து கொண்டாலும், 60 விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு அதில் முப்பது பேருக்குதான் இயக்குகிற வாய்ப்பு தரப்படுமாம்.


அமீர், லிங்குசாமி, பாலாஜி சக்திவேல், போன்ற பிரபல இயக்குனர்களும் இந்த ஸ்கிரீன் ரைட்டிங் பயிற்சிக்கு வந்திருந்தார்கள். பெரிய இயக்குனர்கள். சிறிய இயக்குனர்கள் உட்பட முப்பது பேர் இந்த படங்களை இயக்குவார்கள். நானும் கூட ஒரு படத்தை இயக்கவுள்ளேன் என்றார் கமல். அப்படியென்றால் நாம் மேலே சொன்ன முன்னணி இயக்குனர்களும் இதில் அடங்குவார்கள் என்று நம்பலாம்.

Sunday, June 14, 2009

சம்பள இழுபறி...? சினேகா ஃபெயில்!


சினேகாவுக்கும் பாவனாவுக்கும் செம போட்டி. இறுதி வெற்றி யாருக்கு? கடந்த வார ரேஸ் கேள்வி இது. இதோ ரிசல்டே வந்திருச்சு. 'அசல்' படத்தில் தல அஜீத்தோட நடிக்கிற வாய்ப்பு பாவனாவுக்குதானாம். கடந்த சில மாதங்களாகவே இழுபறியாக இருந்த ஒரே விஷயம் படத்திலே வர்ற இரண்டாவது ஹீரோயினுக்கு யாரை செலக்ட் பண்ணலாம்? என்பதுதான். மம்தாவில் ஆரம்பிச்சு, மார்க்கெட்லயே இல்லாத ஹீரோயின் வரைக்கும் தேடி உதட்டை பிதுக்கிய டைரக்டர் சரண், இறுதியாக யோசிச்ச நடிகைகள்தான் சினேகாவும், பாவனாவும்.

ஒரே நேரத்தில் இரண்டு பேரிடமும் பேச்சு வார்த்தைகளை துவங்கினார்கள். இருவரில் யாரு கிடைச்சாலும் ஓ.கே என்ற அஜீத்தின் அனுமதியோடு நடந்த பேச்சு வார்த்தையில் எல்லா விஷயத்துக்கும் விட்டுக் கொடுத்தாராம் பாவனா. ஆனால் சம்பள விஷயத்தில் கொஞ்சம் கறாராகவே இருந்தாராம் சினேகா.


பாவனாவுக்கு அட்வான்ஸ் கொடுத்து இழுபறிக்கு முடிவு கட்டியதால், இம்மாதம் படப்பிடிப்பை துவங்கப் போகிறார்கள். முதல் கட்ட படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெறுகிறதாம். ஏன் மலேசியா? ஒருவேளை பில்லா சென்ட்டிமென்டோ என்னவோ!

அஜீத், விஜய் பட இயக்குனர்கள்...? குழப்பத்தில் கோடம்பாக்கம்!


விட்டா உச்சி மாநாட்டை கூட்டி, நச்சுன்னு நச்சுன்னு விவாதிப்பாங்க போலிருக்கு. அப்பவும் ஒரு முடிவுக்கு வருவாங்களாங்கறதுதான் டவுட்! வர்ற செய்திகளையும் நம்பறதா வேணாமான்னு ஒரே குழப்பம். அஜீத்தோட ஐம்பதாவது படத்தை சீமான் இயக்குறாரு தெரியுமான்னு பீதியை கிளப்புறாங்க. இந்த பக்கம் திரும்பினா, விஜயோட ஐம்பதாவது படத்தை பேரரசு இயக்கலே தெரியுமான்னு நிம்மதிக்கு உத்தரவாதம் தர்றாங்க. என்னதான் நடக்குது கோடம்பாக்கத்திலே?

முதல்ல தல மேட்டருக்கு வருவோம். நீண்ட காலமாகவே தயாரிப்பாளர் தாணு, அஜீத்திடம் கால்ஷீட் கேட்பதாக தகவல். இந்த நேரத்திலே சீமானும் தாணுவிடம் ஒரு கதை சொன்னாராம். கதை பிடித்திருந்ததால் 'விக்ரம், அல்லது அஜீத்துடன் பேசுறேன்' என்றாராம் தாணு. அதற்குள் அஜீத்தின் ஐம்பதாவது படத்தை சீமான் இயக்குகிறார் என்று செய்திகள் கசிய துவங்கிவிட்டது. ஒரு சிங்கிள் பைசா கூட இன்னும் யாருக்கும் கைமாற வில்லை என்கிறது கோடம்பாக்கத்து பட்சி.

இந்த பக்கம் விஜயின் 50 வது படத்தை இயக்குவது யாருன்னு பந்தயம் போட்டு, தெருவுக்கு தெரு சூதாட்ட கிளப்பே நடத்துவாங்க போலிருக்கு. சங்கிலி முருகன் தயாரிக்கிறார்னு ஒரு நியூஸ். படிச்சிட்டு பக்கத்தை திருப்பறதுக்குள்ளே, இல்லையில்லை... இந்த படத்தை ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிக்கிறார்னு இன்னொரு நியூஸ். பேரரசு, பேரு தெரியாத அரசுன்னு ஒரு டஜன் டைரக்டரோட பேரை எழுதிட்டாங்க. இப்போ கடைசியா ஒரு தகவல் உலவுது.

விஜயோட ஐம்பதாவது படத்தை பூபதி பாண்டியன் இயக்குகிறாராம். கதை, வசனம் மட்டும் எஸ்.பி.ராஜ்குமார் என்கிறது கோடம்பாக்கம். இதுவாவது உண்மையாகி இந்த மேட்டருக்கு ஒரு முற்றுப்புள்ளி வைங்கப்பா.

நானா அப்படி நடிச்சேன்? சந்தியா பாய்ச்சல்...


ஒட்டுமொத்த இமேஜும், கெட்டு நாசமாப் போனா மாதிரி குதிக்கிறார் சந்தியா. என்னவாம்? மஞ்சள் வெயில் படத்தின் இயக்குனர் வசீகரன், "இந்த படத்தில் சந்தியா முத்தக்காட்சியில் நடிச்சிருக்காரு" என்று பேட்டியளித்தார். "நான் அப்படி நடிக்கவே இல்லை. விளம்பரத்துக்காக இப்படி சொல்வதை என்னால ஏத்துக்க முடியாது" இதுதான் சந்தியாவின் தாட் பூட்! இதுவரைக்கும் ஓ.கே. அதுக்கு பிறகு அவரு சொல்றதுதான் இன்னும் காமெடி.

யாரோ ஒரு டைரக்டர் இவரிடம் கதை சொன்னாராம். "கதை ரொம்ப பிடிச்சிருந்தது. நடிக்கலாம்னு சம்மதம் சொல்ல நினைச்சப்போதான் இந்த படத்திலே முத்தக்காட்சி இருக்கு. நீங்க ஹீரோவுக்கு முத்தம் கொடுக்கணும் என்றார். அப்படின்னா உங்க படமே வேணாம்னு சொல்லிட்டேன். அப்படிப்பட்ட என்னை போயி இப்படி சொல்லிட்டாரே"ன்னு ஒரே காச் மூச்!


உடம்பெல்லாம் தெரியுற மாதிரி தை தைன்னு குதிக்கிற ஹீரோயின்கள், முத்த காட்சிக்கு மட்டும் 'நோ' சொல்றது என்ன பாலிசின்னு புரியவே இல்லை. சரி, அப்படியே ஒரு பாலிசி இருந்தாலும், கைவசம் ஏதோ பத்து படங்கள் இருப்பது மாதிரியும், வந்த படத்தை ஒரே ஒரு காரணத்துக்காக வேணாம்னு ஒதுகிட்ட மாதிரி சந்தியா பில்டப் பண்ணுவதுதான் ஏன்னே புரியலே. யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க சார்...

லட்சுமிராய் அடித்த லிப் கிஸ்!


உச்சி முதல் உள்ளங்கால் வரைக்கும் இச்சு இச்சுன்னு முத்தம் கொடுக்க அனுமதிக்கிற நடிகைங்க, உதட்டிலே கொடுத்தா மட்டும் Ôஉஹ¨ம் மாட்டேன்Õனு அடம் புடிக்கிறது ஏன்? நேற்று கூட சந்தியாவோட முத்த அட்டகாசத்தை கொஞ்சம் முறைப்பாவே எழுதியிருந்தோம்.


முழுக்க பெஞ்ச மழையிலே, புருவம் ஈரமாயிருச்சேன்னு பதறுன மாதிரியில்லே இருக்கு இவங்க பண்ணுற அட்டகாசம்? ஆனால், இதற்கெல்லாம் அஞ்சாமல் லிப் கிஸ்சில் உலக சாதனையே புரிவார் போலிருக்கு லட்சுமிராய். முன்னணி ஹீரோவோட நடிச்சாலும் சரி, முதல் படமே இதுதான்னு சொல்ற ஹீரோவா இருந்தாலும் சரி, Ôதேவைப்பட்டா வச்சுக்கோ" என்று உதட்டை ஒப்படைத்துவிடுகிறார் லட்சுமிராய்.


முத்திரை படத்தில் வில்லனாக நடிக்கும் டேனியல் பாலாஜிக்கு ஜோடி நம்ம லட்சுமிராய்தான். படத்தில் இரண்டு பேருக்கும் ஒரு முத்தக்காட்சி இருக்கிறது. இதில் எட்டு தடவையாவது டேனியலுக்கு லிப் கிஸ் அடித்தாராம் லட்சுமிராய். Ôஅவங்க நல்ல சிவப்பு. அழகு, அருகில் யாரு போனாலும் ஈசியா காதல் வயப்பட்டிருவாங்க. நானும் அவங்களுக்கு கிஸ் அடிக்கும் போது நெர்வஸ் ஆயிட்டேன். ஆனால், உற்சாகமாக நடிக்க சொல்லி என்கரேஜ் பண்ணியதே அவங்கதான்Õனு லட்சுமி புராணம் பாடுகிறார் டேனியல்.


சும்மாவா விழுந்தாரு டோனி?

Monday, June 8, 2009

புதுப்படங்களே, போ...! த்ரிஷாவின் பாலிவுட் ஆசை?


கூண்டுக்கிளியை திறந்துவிட வேண்டியது. பிறகு 'போயிருச்சே போயிருச்சே'ன்னு புலம்ப வேண்டியது. "தமிழா, இது அழகா?"ன்னு கேட்கறதுக்கு முன்னாடி விஷயம் என்னன்னு சொன்னாதானே புரியும்? அசின் பாலிவுட், ஹாலிவுட்டுன்னு போயிட்டார். அவர் சென்னைக்கு வருவதே தலைப்பு செய்தியாகிவிட்டது. அந்தளவுக்கு அவரது வருகையை ஆவலோட எதிர்பார்க்கிறான் தமிழன். 'திரும்ப தமிழ் படங்களில் எப்போ நடிப்பீங்க?' என்று கேட்டு, 'கட்டாயம் நடிப்பேன்'னு அவரு சொன்னதும்தான் திருப்தியடையுது அவன் மனசு.

இதோ- அடுத்த கிளியோட கூண்டும் திறக்கப் போவுது. பறக்கப் போவது த்ரிஷா! தமிழில் ஆடுகளம், விண்ணை தாண்டி வருவாயா, தெலுங்கில் கோபிசந்துடன் ஒரு படம். இதுதான் த்ரிஷாவின் கைவசப் படங்கள். இந்த படங்களை முடிச்சிட்டு அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஆஃபர்கள் குவிகிறதாம். ஆனால், எந்த படத்தையும் தற்போது ஒப்புக் கொள்ளும் மன நிலையில் இல்லையாம் த்ரிஷ்!

ஏன்? அவரது பார்வையெல்லாம் பாலிவுட்டில் நிலை கொண்டுள்ளது என்கிறார்கள். அசினின் வெற்றியும், அவர் வாங்குகிற சம்பளமும் த்ரிஷாவின் மனசில் பாலிவுட் ஆசையை தூண்டிவிட்டிருக்கிறது. தனக்கு வேண்டியவர்கள் மூலம் நல்ல இந்தி படங்கள் அமைந்தால் நடிக்கலாம் என்று தூது விட்டிருக்கிறாராம். இந்த தீவிர தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தால்தான் அவர் இங்கேயே நடிப்பாரா, அல்லது இந்திக்கு போவாரா? என்பது முழுமையாக தெரிய வரும்.

கல்யாணம் முடிஞ்சிருச்சா? நயன்தாரா ஆவேச பதில்!


வதந்தி ரயிலேறியும் வரும், மெயிலேறியும் வரும்ங்கிறதுக்கு உதாரணம், நயன்தாரா-பிரபுதேவா கல்யாண மேட்டர்தான்! ஐதராபாத் சேனல்களில் இரண்டு பேருக்கும் ரகசிய திருமணம்னு செய்தியை கிளப்பிவிட்டுட்டாங்க. அடுத்தடுத்த வினாடிகளில் சென்னையிலும் பற்றிக் கொண்டது விவகாரம். (டெக்னாலஜியை எவ்ளோ வேகமா பயன்படுத்துறாங்கப்பா!)

பிரபுதேவா, நயன்தாரா செல்போன் இரண்டும் 'நாட் ரீச்சபிள்' ஆகிவிட, நாக்கு தள்ளி போனார்கள் நிருபர்கள். யாரை பிடிச்சு, எப்படி உறுதிப்படுத்துவது? நயன்-பிரபுவுடைய பிஆர்ஓ க்கள், மேனேஜர்கள் என்று செல்போன் பறக்க, 'நாங்களே லைன் கிடைக்காம தடுமாறிட்டு இருக்கோம். கேட்டு சொல்றோம்' என்று கழன்று கொண்டார்கள் அவர்களும்.

எப்படி வந்தது இப்படி ஒரு வதந்தி? நயன்தாரா தனது மணிக்கட்டில் பிரபுதேவா படத்தை பச்சை குத்தியிருக்கிறார் என்று ஒரு பிரபல வார இதழில் செய்தி. இன்னொரு பிரபல வார இதழில், நயன்தாரா பற்றி கேட்ட நிருபரிடம் பிரபுதேவா சொன்ன பதில்... 'அது என் சொந்த விஷயம்!' போதாதா? இரண்டையும் முடிச்சு போட்டு, நயன்தாரா கழுத்தில் மூன்றாவது முடிச்சையும் போட்டுவிட்டது மீடியா!

நிருபர்களும், பொதுமக்களும் தவிச்ச தவிப்பை விடுங்க. தமிழ்சினிமாவின் மிக முக்கியமான இரண்டு ஹீரோக்கள், 'செய்தி நிஜம்தானா?'ன்னு கேட்டு நயன்தாராவுக்கு நெருக்கமான வட்டாரத்திலே விசாரிச்சாங்களாம். அவங்களும் சீரியஸ்சா நயன்தாராவை தொடர்பு கொண்டு இன்னாரு விசாரிச்சாங்கன்னு சொல்ல, அதுக்கு நயன்தாரா சொன்ன பதில் இருக்கே, பயங்கரம்டா சாமி...

'மொதல்ல அவங்கவங்க பொண்டாட்டிய பத்திரமா பார்த்துக்க சொல்லுங்க. அப்புறம் வரலாம் எங்கிட்டே'ன்னாராம். உச்சபட்ச கோவத்திலே இருக்காரு போலிருக்கு...!

என்னோட கவர்ச்சி? 'குத்து' திவ்யா குதூகலம்!


தலைவிரித்தாடுது ஹீரோயின் பஞ்சம் என்பதற்கு சமீபத்திய உதாரணம் குத்து திவ்யா! கன்னடத்தில் சூப்பர் ஸ்டாரிணியாக இருந்தாலும், தமிழில் அவர் ஒன்றும் தேவதையல்ல. ஆனாலும், அவரே வேணாம்னு மறுக்கிற அளவுக்கு தமிழ்லே இருந்து ஆஃபர் குவியுதாம். ஸ்ரீகாந்தும், வெண்ணிலா கபடிக்குழு விஷ்ணுவும் நடிக்கிற 'துரோகி' படத்திற்கு ஜோடியா நடிக்க அழைத்தார்களாம். இரண்டு ஹீரோயின் சப்ஜெக்ட்ல நடிக்கறதில்லேன்னு ஒதுங்கிகிட்டாராம் திவ்யா. அப்படின்னா வாரணம் ஆயிரத்திலே நடிச்சாரே எப்படியாம்?

'அது விதிவிலக்கு. காரணம், என்னோட கேரக்டருக்கும் அதிலே வெயிட் இருந்திச்சு' என்றார். வருஷத்துக்கு ஒரு படமாவது தமிழ்லே நடிக்கணும். அதுக்காகதான் என்னோட டைட் ஷெட்யூலிலேயும் தமிழ்லே நடிக்க தேதிகளை ஒதுக்குறேன். இப்போ ஜீவா நடிக்கிற சிங்கம் புலி படத்திலே அவருக்கு ஜோடியா நடிக்கிறேன். செல்போன் விக்கிற கேரக்டர் எனக்கு. நடிக்கறதுக்கு நிறைய ஹோப் இருக்கு. குத்து படத்திற்கு பிறகு அவ்வளவு கிளாமரா தமிழ்லே நடிக்கலையேன்னு கேட்கிறாங்க. அந்த படம் மாதிரி டூ பீஸ்லே நடிக்கலேன்னாலும், சிங்கம் புலியிலே என்னோட கவர்ச்சியும் ஸ்பெஷலா பேசப்படும் என்றார் திவ்யா.

வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவோட பேத்திதான் திவ்யா. அப்போ வெளிநாட்ல டூயட் இருக்கும்னு நம்பலாம்!

பூமிகாவின் ஹனிமூன்! தெருவுக்கு தெரு ஹாட் சேல்..


சிம்ரன், மாளவிகா போன்றவர்கள் போராடி தோற்ற மண் இது! ஏதோ சுதந்திர போராட்டமளவுக்கு பில்டப் இருக்கே என்று ஃபீல் பண்ண வேண்டாம். அதைவிட பெரும் போராட்டம் இது. திருமணத்திற்கு பிறகு நடிக்க வந்தால், சீச்சி பழம் புளிக்கும் கதைதான். வேறு வழியில்லாமல் சொந்த ஊருக்கே மூட்டை கட்டி விட்டார் சிம்ரன். இவராவது பரவாயில்லை. மாளவிகாவுக்கு என்ட்ரி விசாவே கிடைக்கவில்லை.

இந்த நிலையில் பூமிகாவுக்கு மட்டும்தான் புதுப்புது படங்களாக கிடைக்கின்றன. அதுவும் ஹீரோயினாகவே! தமிழில் ஸ்ரீகாந்த்துடன் 'மா' படத்தில் நடிப்பதாக புக் ஆனார். படம் என்ன ஆனது என்று கேட்டால், கோடம்பாக்கத்தில் ஒரு இருமல் சத்தம் கூட இல்லை! ஆனால் வரும் என்கிறார்கள். மலையாளத்தில் மோகன்லாலுடன் ஒரு படத்தில் நடிக்கிறார். 'கல்யாணம் ஆன நடிகைகளை ஒதுக்குற பழக்கம் இங்கதான் இருக்கு. இந்தியிலோ, மலையாளத்திலோ இல்லை' என்கிற பூமிகா, 'மா' வ(ள)ராமல் போனாலும், தமிழில் வாய்ப்பு கிடைத்தால் சம்பளத்தை குறைத்துக் கொள்ளவும் தயாராக இருக்கிறாராம்.

இதையெல்லாம் விடுங்க... கோடம்பாக்கத்தின் ஹாட் சேல் பூமிகாவோட பலான படம்தான் தெரியுமா? அவங்க ஹனிமூன்லே எடுத்ததுன்னு சொல்லி தெருவுக்கு தெரு ரிலீஸ் பண்ணுது ஒரு கோஷ்டி! பூமிகாவுக்கு தெரியுமா?

மீனாட்சி மேலதான் தப்பு! டைரக்டர் கொக்கரிப்பு


யாருக்கோ சடங்குன்னா, யார் யாரோ நலுங்கு சுத்துறது நம்ம சினிமாவிலேதான்! தயாரிப்பாளருக்கு சம்பந்தமே இல்லாத ஒரு விழாவுக்கு ஒரு ஹீரோயின் கிளம்புறாங்கன்னு வைங்க. அவங்க போக வர்ற பிளைட் டிக்கெட்டை கடைசியா எந்த ஷ§ட்டிங்கிலே இருக்காங்களோ, அந்த தயாரிப்பாளருதான் ஏத்துக்கணும்னு ஒரு எழுதப்படாத விதி இருக்கு கோடம்பாக்கத்திலே.

இப்படி அடுத்தவங்க காசிலே மஞ்சக்குளிக்கிறவங்க மத்தியிலே தன் காசிலே போற ஹீரோயின்களும் இருக்கதான் செய்யுறாங்க. லேட்டஸ்டா வந்த மீனாட்சி விவகாரம் எப்படி? அகம் புறம் படத்தோட கடைசி நாள் ஷ§ட்டிங்கை முடிச்சிட்டு மும்பை திரும்புறதுக்கு டிக்கெட் போட சொன்னாங்க. தயாரிப்பாளரும், டைரக்டருமான திருமலையும் டிக்கெட் போட்டு கொடுத்திட்டாரு. ஆதித்யா ஹோட்டலில் இருந்து காரில் கொண்டு போயி விடுற பொறுப்பும் இவருடையது. எல்லாமே சரியதான் நடந்திச்சு. ஆனால், கிளம்ப வேண்டிய மீனாட்சி ஒரு மணி நேரம் ஏர்போர்ட்டுக்கு லேட்டா போனாராம். அதுவரைக்கும் நிறுத்தி வைக்க அது என்ன டவுன் பஸ்சா? ஃபிளைட் புஸ்ஸ்ஸ்....

வண்டி போயிருச்சு. வேற டிக்கெட் எடுத்துக் கொடுங்கன்னு மீனாட்சி கேட்க, முடியாதுன்னு திருமலை மறுக்க, வெளியே வராம உள்ளேயே உட்கார்ந்திட்டாங்க பொண்ணும், அம்மாவும். பிளைட்டை தவற விட்டது அவங்க தப்புன்னு ஆர்ப்பாட்டம் பண்ணாம, மீண்டும் அவங்களை ஹோட்டலுக்கு வரவழைச்சு இரவு தங்க வைச்சு மறுநாள் டிக்கெட் போட்டு அனுப்பினாராம் திருமலை. இந்த வகையில் அவருக்கு சம்பந்தமே இல்லாமல் எக்ஸ்ட்ரா 19 ஆயிரம் செலவு.

ஆனால் பெண் என்றால் பேயே இறங்கும்போது மீடியா இறங்காதா? எல்லாரும் மீனாட்சிக்கு சப்போர்ட் பண்ண, உண்மைய எங்கே போயி சொல்றதுன்னு புலம்புனாரு திருமலை. நம்பகிட்டே சொல்லியாச்சுல்ல, கவலைய விடுங்க...

கைவிட மாட்டேன்! -ரசிகர்களுக்கு விஜய் டானிக்!


ஜுன் 22 விஜய் பிறந்த நாளின் கவுண்ட் டவுன் ஸ்டார்ட்! 'இந்த முறை கட்சி. விரைவில் ஆட்சி' என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் இருக்க, விஜய் தரப்போவது என்ன? பெரும் கேள்வியுடன் கடந்த ஞாயிற்றுக் கிழமை சென்னைக்கே வந்துவிட்டார்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள். 'தலைவா, கட்சி எப்போ?' என்று அவர்கள் கரகோஷமிட, 'அமைதி...அமைதி' என்றார் விஜய்.

'நேற்றைய தொண்டன், இன்றைய தலைவன். இன்றைய தொண்டன் நாளைய தலைவன். என்னை நம்பி வந்த உங்க யாரையும் கைவிட மாட்டேன். நான் வளரும்போது என்னோட சேர்ந்து நீங்களும் வளருவீங்க. முன்பெல்லாம் எம்ஜிஆர் மன்றத்திலே சேரப்போறேன்னு வீட்டிலே சொன்னா, தாராளமா சேருய்யான்னு சப்போர்ட் பண்ணுவாங்க தாய்மார்கள். அதே மாதிரி இப்போ போயி விஜய் மன்றத்திலே சேரப்போறேன்னு சொல்லி பாருங்க. தாராளமாக சம்மதிப்பாங்க உங்க வீட்டிலே' என்றார் விஜய்.

முதல் கட்டமாக ஜுன் 22 ந் தேதி வட சென்னை பள்ளிக்கூடம் சிலவற்றிற்கு 20 கம்ப்யூட்டரும், தென் சென்னை பள்ளிக்கூடம் சிலவற்றிற்கு 20 கம்ப்யூட்டரும் வாங்கி தரப் போகிறாராம். பிரியாணி பொட்டலத்திலிருந்து கம்ப்யூட்டருக்கு மாறியிருக்கிறார் விஜய். டெக்னாலஜி வளர, வளர உதவிகளும் அதற்கேற்ப மாறுது போலிருக்கு. வாழ்க!

சரி, கட்சிய பற்றி சொல்லலியே? அட, அதை அவருல்ல சொல்லணும்!

சுஹாசினியின் 'சுருக்' விமர்சனம்! லாரன்ஸ் ஆத்திரம்


தடாலடி விமர்சனம் இல்லை சுஹாசினியுடையது. ஆனால் ராஜாதிராஜா படத்தை விமர்சிக்கும் போது மட்டும் என்னாச்சோ, கொஞ்சம் எல்லை மீறிவிட்டார். இருபது வருஷத்துக்கு முன்னாடி வந்திருக்க வேண்டிய படம். லாரன்சும், ஷக்தி சிதம்பரமும் சேர்ந்து கூத்தடித்திருக்கிறார்கள் என்று சொல்லப் போக, கடும் கோபத்திலிருக்கிறது ரா.ரா யூனிட்.

ஹாசினி டைம்ஸ் என்ற நிகழ்ச்சியில் விமர்சனம் என்ற பெயரில் இப்படத்தை கிழித்து தொங்க போட்ட சுஹாசினி மேல் வழக்கு தொடருகிற அளவுக்கு போய்விட்டார் அப்படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனருமான ஷக்தி சிதம்பரம். லாரன்சுக்கு நடிப்பே வரவில்லை என்று சுஹாசினி சொன்னதுதான் சுர்ரென்று கோபத்தை வரவழைத்திருக்கிறது ஹீரோவுக்கு. "கொஞ்சம் ஓவராதான் பேசுறாங்க" என்கிறார் லாரன்சும்.
இப்படி இவர் பேசியதால் தியேட்டரில் வசூல் குறைஞ்சிருக்கு, அவர் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்திலும், இயக்குனர்கள் சங்கத்திலும் புகார் கொடுத்திருக்கிறார் ஷக்தி சிதம்பரம். இதற்கிடையில் என்ன நடந்திச்சுன்னு தெரியலே, சப்பென்று ஆகிவிட்டது சமாச்சாரம். ஆறுமுகம் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தவர், மேடையில் சுஹாசினி பற்றி ஏதாவது பேசுவார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு செம ஏமாற்றம். பரத்திற்கும் ஆறுமுகம்தான். அவருக்குள்ளே ரஜினி இருக்கார், கமல் இருக்கார், விஜய் இருக்கார்னு அவர் சொல்லிக் கொண்டே போக, அதுவும் நல்லாதான்ய்யா இருந்திச்சு....

தோல்விக்கு நானா காரணம்? தமன்னா ஆவேசம்!


ஆந்தைய பிடிக்க வலை வீசினா, அடிஷனலா கோட்டானும் கிடைச்ச மாதிரி ஒரு பதில்! சொன்னவர் நம்ம தமன்னா. நீங்க ராசியில்லாத நடிகைங்கிறாங்களே? கேட்ட அடுத்த வினாடியே ஜிவ்வுன்னு கோவம் வருது முகத்தில். ஆனாலும் சமாளித்துக் கொண்டு, 'அப்படின்னா என்னுடன் கேடி படத்திலே அறிமுகம் ஆன இலியானாவையும் அப்படி சொல்லுவீங்களா?' என்றார்! (அதானே?)

தெலுங்குலே நம்பர் ஒன் இப்போ இலியானாதான். தமன்னாவுக்கு இப்போதான் தெலுங்கு தேச கதவுகளை 'கிறீச்' சவுண்டோடு திறந்திருக்கிறாங்க. நான் நடிச்சுதான் கேடி ஓடலைன்னா, இலியானா நடிச்சு ஓடியிருக்கணுமே? இது தமன்னாவோட வாதம். அதுக்கு பிறகு நான் நடிச்ச சில படங்கள் ஓடாம போனா அதுக்கு நான் மட்டும் எப்படி காரணம் ஆக முடியும்? அயன் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதுக்கு நான் மட்டுமா காரணம்? அப்படி நான் நடிச்ச மற்ற படங்கள் ஓடாமல் போனதற்கும் நான் மட்டும் காரணமில்லே. (ஷாமும் இதையேதான் சொல்றாரு)

கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்து இன்னைக்கு ஒரு இடத்தை பிடிச்சிருக்கேன். ராசியில்லாத நடிகைன்னா இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாதே என்றார் ஆவேசத்தோடு. அட, ஆமாம்ல! நல்ல கௌப்புறாங்கப்பா பீதிகள...!


Thursday, June 4, 2009

கிசுகிசு.....

சின்னத்திரைக்கு வந்த பிறகும் முன்னணி நடிகையாக இருக்கும் அந்த 'தேவ' நடிகையின் மூன்றெழுத்து தம்பிக்கு முன்னாடியே கல்யாணம் ஆயிடுச்சாம்! அக்காவின் காந்தர்வ திருமணத்தால் ஆடிப்போயிருந்த அம்மா, தம்பியை வற்புறுத்தி சொந்தத்திலேயே கட்டி கொடுத்துவிட்டாராம். ஆனாலும், தன்னுடன் நடிக்கும் ஹீரோயினோடு வருகிற கிசுகிசுக்களை சந்தோஷமாக ரசிக்கிறார் தம்பி. கல்யாண விஷயம் வெளியே தெரியாமல் மறைப்பதே இந்த கிசுகிசுதானே? அதனால்தான் இந்த ரசிப்பு!


ஏதோ சினிமாவுக்காகதான் சிகரெட் குடிச்சது மாதிரி அலட்டிக் கொள்கிறார் கட்டிப்பிடி நடிகை. உண்மையில் ஒரு நாளைக்கு ஒரு பாக்கெட்டை காலி பண்ணுகிற ஆள்தானாம் அவர். இனி குணச்சித்திர வேடத்தில் நடிக்கணும் என்பது இவரது ஆசை. ஆனால் வருவதெல்லாம் வில்லி என்பதால், அப்செட் ஆகியிருக்கிறாராம்.

ஆ... தங்கச்சி கிடைச்சாச்சு!


தமன்னாவுக்கு தங்கச்சி வேஷம் இருக்கு, வர்றீங்களான்னு கேட்டால், ஏதோ பன்றி காய்ச்சல் வந்தவங்களுக்கு பால் பழம் கொடுத்திட்டு வரலாம் வர்றீங்களான்னு கேட்ட மாதிரி பேஸ்த் அடிச்சு பின் வாங்குது தமிழ் சினிமா நடிகைகங்க ஏரியா. ஏன்? ஏன்?


வேறொன்றுமில்லே, ஒரு படத்திலே தங்கச்சியா வந்தா அப்புறம் பாசமலர் பட்டத்தை கட்டி, பின் வாசல் கதவை விரிய திறந்து வச்சிருவாங்களோங்கிற பயம்தான். துள்ளுவதோ இளமையில் அறிமுகம் ஆகி, ஏராளமான படிகளை தடுக்கி தடுக்கி தாண்டி வந்த ஷெரினிடம் கேட்டார்களாம், "தமன்னாவுக்கு தங்கச்சியா நடிக்கிறீங்களா?" என்று. "ஏற்கனவே இருட்டு. இதுல கூலிங் கிளாஸ் வேறயா?"ன்னு கோவப்பட்ட ஷெரீன், வேணாம்னு மறுத்துவிட்டதாக தகவல். பொன் வைக்கிற இடத்திலே பொன்னையே வச்ச மாதிரி இப்போ அழகான ஒரு ஹீரோயின் வந்துவிட்டார் அந்த கேரக்டரில் நடிக்க. அவரது பெயர்... சபான் சரண்.


கிட் காட், ஸ்கூட்டி, டிஷ் டிவி, கைனடிக் ஹோண்டா உள்ளிட்ட ஏராளமான விளம்பரங்களில் நடித்திருக்கிறாராம் சபான். ஒரு இந்தி படத்திலும் அறிமுகம் ஆகியிருக்கிறார். தென்னிந்திய மொழிகளில் அறிமுகமாகும் ஆசையில் இருந்த சபான் சபாஷ்னு சொல்ற மாதிரி அமைந்ததுதான் இந்த கண்டேன் காதலை பட வாய்ப்பு.


படத்திலே இவர் போட்டிருக்கிற மினி ஸ்கர்ட் நிச்சயம் அவருடையதாக இருக்க வாய்ப்பில்லை. தயவு செய்து ஸ்கர்ட்டுக்குரிய சிறுமியிடம் அதை கொடுத்துவிடும்படி சபானிடம் தாழ்மையோடு கேட்டுக் கொள்ளலாமா ரீடர்ஸ்....?

பரத்தின் ஆறுமுகம்? ரஜினி அனுப்பிய எஸ்.எம்.எஸ்


வாசனைக்கு கூட ஒரு நடிகை இல்லை. ஆனாலும் ஆறுமுகம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா களை கட்டியது. படத்தின் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவின் அக்கறையான அழைப்பு மேடையிலும், கீழேயும் கூட்டத்தை சேர்த்திருந்தது. இவர்களுடன் சின்னத்தளபதியின் ரசிகர்களும் திரளாக வந்திருந்ததால் விசில், கூச்சல் என்று ஏக அமர்க்களம்!



சூப்பர் ஸ்டார் நடித்த 'மூன்று முகம்' சூப்பர் ஹிட்! இதுவோ 'ஆறு முகம்'. படம் டபுள் சூப்பர் ஹிட் ஆகணும் என்று டைமிங்காக அடித்தார் எஸ்.பி.முத்துராமன். நாம எப்படி இந்த டைட்டிலை மிஸ் பண்ணினோம்? என்று படத்தின் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவுக்கு மெசேஜ் அனுப்பியிருந்தாராம் சூப்பர் ஸ்டார் ரஜினி. 'அந்தளவுக்கு இந்த டைட்டில் எல்லாரையும் ரீச் பண்ணியிருக்கு' என்றார் பரத். நன்றிக்குரியவர்கள் லிஸ்டில் சுரேஷ்கிருஷ்ணாவுக்கு அடுத்து பரத் சொன்னது ரம்யா கிருஷ்ணனுக்குதான். 'படையப்பா மாதிரியே இதிலே ஒரு பவர்ஃபுல் ரோல் பண்ணியிருக்காங்க' என்றவர், 'நான் இந்த படத்திலே நடிக்க முதலில் தயங்கினேன் தெரியுமா?' என்றார்.



'எனக்கெல்லாம் இது தாங்குமா? என்று கேட்ட பரத்தை சமாதானப்படுத்தி தைரியத்தை வரவழைத்ததும் சுரேஷ் கிருஷ்ணாதானாம். பழனி படம்தான் என்னை மாஸ் ஹீரோவாக்கியது. அதற்கு பிறகு ஆறுமுகம் எனக்கு வேறொரு முக்கிய இடத்தை தமிழ் சினிமாவில் கொடுக்கும்' என்று நம்பிக்கையோடு பேசினார் பரத்.



'தேவா சார் இரண்டு வருஷம் படம் இல்லாம இருந்ததா இங்கே சொன்னார். சார், நீங்க அப்படி சொல்லக் கூடாது. தமிழ்சினிமாவின் வரலாற்றில் நீங்க ஒரு பெரிய எபிசோட்! இரண்டு வருஷம் உங்களை பயன்படுத்தலேன்னா அது இந்த சினிமாவுக்குதான் நஷ்டம்' என்று ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டார் பிரசன்னா!

ஜெயம் ரவி திருமணம். ரஜினி, கமல் நேரில் வாழ்த்து


நடிகர், நடிகைகளின் டீன் ஏஜ் பருவம் கண்ணாடி டம்ளர்கள் போல கவனமாக கையாளப்பட வேண்டியவை. அதில் சிறு கீறல் கூட விழாமல் இருந்தவர் ஜெயம் ரவி. (அப்ப எங்க டீன் ஏஜ் பருவம் எவர் சில்வர் டம்ளரா என்று வம்பு கிளப்புபவர்களுக்கு, சினிமா அதிகம் கவனிக்கப்படுகிற ஏரியா என்பதால்தான் இந்த உவமை!) விரும்பிய பெண்ணை கூட, விவகாரத்தை வளர்க்காமல் நிறைவேற்றிக் கொண்ட வல்லமை அவரது அதிர்ஷ்டம்.


நினைத்தபடியே காதல் மனைவி ஆர்த்திக்கு இன்று காலை 8.46 க்கு தாலி கட்டினார் ஜெயம் ரவி. பட்டு வேட்டியும் சட்டையும் அணிந்திருந்தார் ரவி. தங்க நிற பட்டுப்புடவை அணிந்திருந்தார் ஆர்த்தி. அடையார் பார்க் ஷெராட்டன் ஹோட்டலில் அமைந்துள்ள மௌபரிஸ் ஹாலில் இந்த திருமணம் கோலாகலமாக நடந்தது.


ரஜினி, கமல், ஜெயராம், அர்ஜுன், சுந்தர்சி, குஷ்பு, ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், ராதிகா சரத்குமார், சிபி, ஸ்ரீதேவி விஜயகுமார், வெங்கட் பிரபு, அமீர், ஜனநாதன், எஸ்.பி.முத்துராமன், ஹரி, உள்ளிட்ட திரையுலக பிரபலங்களுடன், முதல்வரின் கலைஞரின் மகள் செல்வி செல்வம் அவர்களும் கலந்து கொண்டார்.

Wednesday, June 3, 2009

தமன்னாவுக்கு தமிழ் சொல்லித்தரும் ஹீரோ...


ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு சீசன். இது தமன்னா சீசன்! நட்சத்திர ஹோட்டலில் எக்கச்சக்க ஆட்டம் போடுகிறார் என்று ஒருபக்கமும், முன்னணி இயக்குனர்களுக்காகவே பிரத்யேக பார்ட்டி கொடுக்கிறார் என்று இன்னொரு பக்கமும் தமன்னா பற்றி தமுக்கடிக்கிறார்கள்.


விசாரித்தால், "இப்படி பார்ட்டி வச்சுதான் வாய்ப்பு வாங்கணும்ங்கிற நிலைமை அவங்களுக்கு இல்லியே"ங்குது தமன்னாவின் நெருக்கமான வட்டாரம். "தமிழ்லே என்ன வேணா எழுதிட்டு போகட்டும். அது அவங்களுக்கு தெரிய போறதில்லே. ஏன்னா தமிழ்லே பேசினாலே கொஞ்சம் கொஞ்சம்தான் அவங்களுக்கு புரியும். இதிலே இவங்க எழுதி, அவங்க படிக்கப் போறாங்களாக்கும்? விடுங்கப்பா" என்கிறது இதே நெருக்கமான வட்டாரம். இப்படியெல்லாம் சொல்லிடுறாங்க என்பதற்காகவே தமிழ் படிக்க ஆரம்பித்திருக்கிறாராம் தமன்னா. முதலில் தாராளமா பேச கத்துக்கணும். அப்புறம் படிக்கவும் கத்துக்கணும் என்பது அவரது ஆசை.


மலர மலர பக்கத்திலே இருக்கும் பொண்ணுக்கு அகர முதல சொல்லி தருவதற்கு ஆர்வத்தோட அலையுறாங்களாம் அவரோட நடிக்கிற ஹீரோக்கள். அதில் முக்கியமான ஒருத்தரு "என்னோட நீ தமிழ்லே மட்டும்தான் பேசணும்"னு சொல்லியிருக்காராம்.


இது ஒருபுறம் இருக்க, சற்றே சரிவில் இருக்கும் இன்னொரு இளம் ஹீரோ இவரது கால்ஷீட் கேட்டதற்கு, தானாகவே பயந்து ஓடும்படி ஒரு சம்பளத்தை சொன்னாராம் தமன்னாவின் அப்பா. நயன்தாராவிலிருந்து, த்ரிஷா வரைக்கும் வேண்டாத ஹீரோவை தட்டிக்கழிக்க இந்த பாலிசியைதான் கடைபிடிக்கிறார்கள்.


அப்போ தமன்னாவோட வளர்த்தி கொஞ்சம் அதிகம்தான்னு சொல்லுங்க...

Tuesday, June 2, 2009

நடிகை சுஹாசினி மீது வழக்கு...?


சமீபத்தில் லாரன்ஸ் நடிப்பில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் "ராஜாதி ராஜா" படம் பற்றி ஜெயா டீவியில் ஒளிபரப்பாகி வரும் சுஹாசினி திரை விமர்சனம் வெகுவாரியாக கீழ்த்தனமாக விமர்சித்துள்ளதாக டைரக்கர் சக்தி சிதம்பரம் கூறியுள்ளார். அதில் சுஹாசினி படத்தையும், டைரக்கர் சக்தி யையும் கேவலமாக விமர்சித்து கடுமையாக தாக்கியிருக்கிறார். அதற்கு சக்தி கூறியதாவது ஒரு படம் எடுத்து முடிப்பதற்கு எவ்வளவோ கஸ்டங்களை எதிர் கொள்கிறோம் சுஹாசினி கண்ணாடி அறைக்குள் இருந்துகொண்டு கல் எறிகிறார். இந்தப் படத்தை விமர்சனம் செய்வதே கேவலமாக இருக்கிறது என கூறியுள்ளார், அவர் மீது வழக்கு தொடரவுள்ளதாகவும், இது பற்றி நடிகர் சங்கத்திற்கு தெரிவிக்க போவதாகவும் சக்தி கூறியுள்ளார்.

தமன்னாவின் புதிய புகைப்படங்கள்...




Sunday, May 31, 2009

நடிகர் ஷாம் உடன் ஒரு Coffee...!


ஒரு காfப்பி ஷாப்பில் ஷாம்மை சந்தித்த போது...

கேள்வி - ஷாம் இடையில் கொஞ்ச நாளா உங்களை காணவில்லையே.?
ஷாம் - அதை விடுங்க! இந்த வருஷம் பாருங்க என்னோட 4 படங்கள் வர இருக்கிறது, இனி என்னை தொடர்ந்து பார்க்கலாம்.
கேள்வி - நீங்கள் நன்றி சொல்ல நினைப்பது.?
ஷாம் - என்னை திரையுலகில் அறிமுகம் செய்த ஜீவா சாருக்கும், தயாரிப்பாளர் விக்ரம் சிங்க்க்கும் தான்.
கேள்வி - ஷாம் சினிமாவில் வராவிட்டால்?
ஷாம் - கிரிகட் விளையாடிக்கொண்டிருப்பான் (சிரிப்புடன்)
கேள்வி - கடவுள் நம்பிக்கை ?
ஷாம் - நிறையவே உண்டு.

கேள்வி - வர இருக்கும் "அந்தோணி யார்" படம் பற்றி...?
ஷாம் - விரைவில் வெளிவர இருக்கு, விவேக் இன் காமெடி ரொம்ப நல்ல வந்து இருக்கு, மல்லிக கபூரும் என்கூட அருமைய நடிச்சி இருக்காங்க..
கேள்வி - நடிகர்களில் உங்களுக்கு நெருக்கமானவர்கள்...?
ஷாம் - ஆர்யா, பரத், இன்னும் நிறைய பேர் இருக்காங்க...
கேள்வி -நிம்மதி???
ஷாம் - இருக்கிறதை வைத்து சந்தோஷப்படுவது!
என சிரித்துவிட்டு கிளம்பினார் ஷாம்...
நன்றி - சுமன்

குழப்பத்தின் மத்தியில் ஒரு குருந்திரைப்படம் உருவாகும் கதை...



புதுமுக இயக்குனர் "இளம் புயல்" சின்னா யாதவ் இயக்கும் "மலர்" குறுந்திரைப்படத்தில் புதுமுக நாயகன் S.G.ஷங்கர் மற்றும் பல புது முகங்கள் இனைந்து நடித்துள்ளனர். இந்தியாவின் வசந்த் டிவி தயாரிப்பில் உருவாகிவரும் இக்குறுகிய திரைப்படம் கூடிய விரைவில் டிவி செனலில் ஒளிபரப்பாக இருக்கிறது. இக்கதைக்கு கதாநாயகி தேர்வில் தேர்வு செய்யபட்ட புதுமுகங்கள் அமலா மற்றும் கார்திகா படப்பிடிப்பின் இடையே ஒதுங்கிக்கொள்ள அவசர அவசரமாக கதாநாயகி தேர்வு நடத்தி ஒரு மாதிரியாக படத்தை நிறைவு செய்தார் இயக்குனர் யாதவ். இறுதிக்கட்டத்தை நெருங்கி இருக்கும் "மலர்" குறுந்திரைப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது. இத்தனை குழப்பத்தின் மத்தியில் இயக்குனருக்கு உதவியாக இருந்த கதாநாயகனை இயக்குனர் வெகுவாக பாராட்டி இருக்கிறார். இயக்குனர் சின்னா யாதவிற்கு சமீபத்தில் "இளம் புயல்" எனும் பட்டம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இருபது வருஷத்துக்கு முன்னாடியே வந்திருப்பேன்!--கமல்ஹாசன் பேச்சு


கமல்ஹாசனின் ராஜ்கமல் பட நிறுவனமும், இந்திய தொழில் தொழில் நுட்ப கழகமும் (ஐஐடி) இணைந்து திரைக்கதை எழுதுவது எப்படி என்ற பயிலரங்கத்தை (வொர்க் ஷாப்) ஐஐடி வளாகத்தில் நடத்துகிறது. இதன் தொடக்க விழாவில் பாலுமகேந்திரா, அமீர் உள்ளிட்ட தமிழ் திரையுலகை சேர்ந்த ஏராளமான இயக்குனர்களுடன், கமல்ஹாசன் கலந்து கொண்டார்.

'இப்படி ஒரு பயிலரங்கத்தை நடத்தணும்னு நானும் பாலுமகேந்திராவும் கனவு கண்டோம். அப்போ நிறைவேற்ற முடியாதளவுக்கு தடையெல்லாம் வந்திச்சு. அது யாரால வந்திச்சுங்கிறது அவருக்கு தெரியும். ஆனா இப்போ அதை நிறைவேற்றி விட்டோம். அந்த வகையில் எனக்கு சந்தோஷம். இன்டர்நெட் இல்லாத காலத்தில் எனக்கு புனா பிலிம் இன்ஸ்டிடியூட்டாக இருந்தவர் பாலுமகேந்திராதான். அவருகிட்டே மட்டுமில்லே, இன்னைக்கு வர்ற இயக்குனர்கள் கிட்டேயும் நான் நிறைய கத்துக்கிறேன். நான் இன்னும் மாணவன்தான்'.


'நான் மாணவன்தான்னு சொல்றதுக்கு ஒரு திமிரு வேணும். அந்த திமிரு எங்கிட்ட நிறைய இருக்கு' என்றார் கமல். 'நீங்க எழுதிய திரைக்கதையிலேயே உங்களுக்கு பிடிச்சது எது?' இந்த கேள்விக்கு சற்று யோசித்த கமல், 'நான் நேற்று எழுதியதை இன்னைக்கு பார்த்த இன்னும் நல்லா செஞ்சிருக்கலாமோன்னு தோணும். இன்னைக்கு உள்ளதை நாளைக்கு பார்த்தாலும் இப்படிதான் தோணும். இப்படி ஒரு பயிலரங்கத்திலே கலந்துக்கிற வாய்ப்பு எனக்கெல்லாம் ஆரம்பத்திலே கிடைச்சிருந்தால், இப்போ நான் வந்திருக்கிற இடத்துக்கு இன்னும் இருபது வருஷத்துக்கு முன்னாடியே வந்திருப்பேன் என்றார் கமல்.


விழாவில் மலையாள இயக்குனர் ஹரிஹரன், இந்தி திரைப்பட வசன கர்த்தா அதுல் திவாரி, ஐஐடி முதல்வர் இடிசாண்டி ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

நான் மட்டுமா காரணம்? ஆர்யா ஆத்திரம்!


அறிந்தும் அறியாமலும், பட்டியல் படங்களுக்கு பிறகு ஆர்யா நடித்த ஒரு படமும் ஓடவில்லை. ஆனால், இரண்டு கோடி சம்பளத்தை குறைப்பதில்லை என்பதில் தீர்மானமாக இருக்கிறாராம். சமீபத்தில் ஒரு விழாவில் கலந்து கொண்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவரும், திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவரும் இந்த விஷயத்தை குறிப்பிட, 'இதே வேலையா போச்சு இவங்களுக்கு' என்று கண் சிவக்கிறாராம் ஆர்யா.


உயிரை கொடுத்து நடிக்கிறேன். உச்சி வெயில்னு பார்க்காம ஓடுறேன். என்னை போயி இவ்வளவு சம்பளம் வாங்குறீயேன்னு சாபம் கொடுக்கலாமா? நான் நடிச்ச படம் ஓடலேன்னா அதுக்கு நான் மட்டுமா காரணம்? என்று நெருக்கமானவர்களிடம் சொல்லி இவர் பிதற்றுவது ஐயோ பாவமாக இருக்கிறதாம்.


இதற்கிடையில் மீண்டும் கூட்டு சேர ஆசைப்பட்ட பிதா இயக்குனருக்கு ஆர்யா சொன்ன பதில், 'ஆளை விடுங்க சாமீய்' கதை கேட்கிற விஷயத்தில் இன்னும் கவனமாக இருக்க வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறார். அதற்காக ஒரு அறிவாளி கூட்டத்தை தயார் செய்யும் வேலையில் இருக்கிறாராம். இப்போதான் அலாரம் வச்சு எழுப்புது விதி!

லவ்வும் இல்லே, ஒன்னும் இல்லே, ஆளை வுடுங்கப்பா!


ஐம்பது வயசு ஆளைக் கூட, 'அமலா போனா என்ன, ஒரு விமலா இருக்காங்களே?' என்று சந்தோஷப்பட வைத்த விமலா ராமன், கண்ணிலே கருவளையம் விழுற அளவுக்கு கவலையிலே ஆழ்ந்திருந்தார். எல்லாமே போன மாசம் வரைக்கும்தான். இந்த மாசம் விமலா, இன்னோரு ஆப்பிள் அமலா!


கருவளையத்துக்கு காரணம் என்ன? அது காணாமல் போன மாயம்தான் என்ன? தமிழில் ஒரு படமும் தேறாமல் போனதால் தெலுங்குக்கு போனார் மம்தா. அங்கேதான் இவருக்கும் வருணுக்கும் பிரண்ஷிப்! போதாதா?


பொறியை அள்ளி போகியிலே போட்ட மாதிரி, இரண்டு பேரையும் சேர்த்து வச்சு ரவுண்டு கட்டியது மீடியா. 'அவருக்கும் எனக்கும் காதலும் இல்லே, கண்றாவியும் இல்லே'ன்னு தனித்தனியா பேட்டி கொடுத்தாலும் விடாம துரத்திய மீடியா, லவ் லவ் என்று மறுபடியும் மறுபடியும் மத்தாப்பூ கொளுத்த, பயங்கர கோவாச்சு வந்திருச்சு விமலாவுக்கு!


வருணையும் வரவழைத்து பக்கத்தில் வச்சுகிட்டு தெளிவா புரிய வச்சாராம் தெலுங்கு மீடியாவுக்கு. 'எனக்கும் இவருக்கும் லவ்வு இல்லே, ஏன் பிரன்ட்ஷிப் கூட இல்லே. ஒரு படத்திலே நடிச்சோம். இனிமே அதுக்கு கூட வாய்ப்பு இல்லே. போயிட்டு வர்றீங்களா' என்றாராம் பொங்க பொங்க! இப்போதைக்கு பேனாவை மூடி வச்சிட்டு, வேறொரு கிசுகிசுவுக்காக வெயிட் பண்றாங்க.


மாட்லாடுற ஏரியாவிலே மறுபடியும் மாட்டுமா மல்லிப்பூ?

புரட்சித்தளபதிக்கு சம்பளம் நவ கோடிகளாம்!


படம் டப்பா என்றாலும் முதல் பத்து நாட்கள் கலெக்ஷனுக்கு உத்திரவாதம் கொடுக்கிற ஹீரோக்கள் மூவரில் விஷாலும் ஒருவர்! மற்ற இருவர் யார் யார் என்பதை உங்களின் பேரரறிவிற்கே விட்டு விடுகிறோம். இந்த ஒரு காரணத்திற்காகவே 'வச்சுக்கோ...' என்று விஷாலுக்கு வாரியிறைக்கிறார்களாம் தயாரிப்பாளர்கள்.


போக்கிரி பட தயாரிப்பாளர் ரமேஷ் தெலுங்கில் பெரிய்ய்ய்ய்ய்ய முதலீடு செய்திருக்கிறாராம். மூன்று முன்னணி ஹீரோக்களை வைத்து தலா இருபத்தைந்து கோடி பட்ஜெட்டில் மூன்று படங்களை எடுத்து வருகிறாராம். இவர்தான் விஷாலை வைத்து தமிழில் புதிய படத்தை தயாரிக்கிறார். புரட்சித்தளபதிக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா? நவ கோடிகளாம்!


தோரணை படத்தின் ரிசல்ட் என்னவென்றே தெரியாத நிலையில் இப்படி ஒரு சம்பளத்தை கொடுக்க எப்படி முன்வந்தார் ரமேஷ்? வேறொன்றுமில்லை, நாம் முதல் பாராவில் சொன்ன ஃபார்முலாதான்! வியாபார நுணுக்கங்களை விடுங்கள்... பெரும் பிரயத்தனம் எடுத்து ரீமாசென்னுக்கும் அட்வான்ஸ் கொடுத்துவிட்டார்களாம். விஷால் ரசிகர்களுக்கு இதுதான் லேட்டஸ்ட் இனிப்பு. இன்னொரு ஹீரோயினாக முன்பே கமிட் செய்யப்பட்டவர் ஸ்ரேயா என்பது ரசிகர்களுக்கு தெரிந்த விஷயம்தான். ஒரே படத்தில் முன்னாள் அண்ணியும்... இந்நாள் அண்ணியும்!

பிரஸ் வரைக்கும் வந்த பிஸ்கோத்து மேட்டர்!


யானைக்கு கட்டு கட்டா கரும்பை போடுறவங்க, எலிக்கு ஒரு மசால் வடைய போடுறதுக்கு என்னென்னாவோ சொல்றாங்களேன்னாரு லைட்மேன் ஒருத்தரு. என்னா மேட்டருன்னு வாய கிளறுனா, ரொம்ப சொச்சம்..., மூவாயிரத்த தாண்டாத பிஸ்கோத்து மேட்டரு!


விஷால் நடிச்ச முந்தைய படத்தோட ஸ்டில்களை பிரஸ்சுக்கு கொடுக்கறதுக்காக நிறைய சிடிக்களை வாங்கி தயார் பண்ணினாராம் சிவாங்கிற பிஆர்ஓ. இந்த வகையிலே சுமார் மூவாயிரத்து சொச்சம் பில்லு. இதை கொடுக்க அப்புறம் இப்புறம்னு இழுக்கடிச்சாங்களாம். சரி கடைசியா என்னாச்சு? அதை சொல்றதுக்கு முன்னாடி ஒரு ப்ளாஷ்பேக்!


திமிரு படத்திலே ஒரு ஆளை நடிக்க வைக்கிறேன்னு ஐம்பதாயிரம் பணத்தை அவருகிட்டேயிருந்து வாங்கிட்டாரு அந்த படத்தோட டைரக்டர்! ஆனா நாளைக்கு வா, நாளைக்கு வான்னு நாளை ஓட்டியவரு கடைசிவரைக்கும் அந்தாளை நடிக்க வைக்கவே இல்லே. ரிலீஸ் நேரத்திலே ஆபிஸ் வாசலுக்கு வந்து அறைகூவல் விட்டாரு அந்த நடிக்காத நடிகர். வேறு வழியில்லாம ஐம்பதாயிரத்தை விஷாலே கொடுத்தாராம்.


ஹ¨ம், மறுபடியும் நம்ம மேட்டருக்கு வருவோம். அப்படியெல்லாம் கொடுத்த விஷால் தரப்பு, சிவாவை பல முறை இழுக்கடிச்சு இந்த மூவாயிரத்து சொச்சத்தை கொடுக்காமலே விட்ருச்சு. இப்போ போயி கேட்டா, தோரணை ஓடினா தர்றோம்ங்கிறாங்களாம்! ஒன்பது கோடி சம்பளம் வாங்குற நடிகர் ஆபிஸ்லே, மூவாயிரத்துக்கு முக்குறதுதான் ஏன்னு தெரியலேன்னாரு லைட் மேன்!


எறும்புக்கே கரும்புகள போடுற ஏரியாவிலே, இந்த பிஸ்கோத்து மேட்டரை பிரஸ் வரைக்கும் கொண்டு வந்திட்டாங்களே, ரொம்ப பாவம்யா....!

விஜய்யோடு ஜோடி சேரப்போகிறாரா சினேகா?


விஜய்யோட ஐம்பதாவது படத்திலே அவருக்கு ஜோடியா நடிக்கப் போவது தமன்னா! (செய்தி ரொம்ப பழசுங்...ணா) படத்திலே இன்னொரு ஹீரோயினும் இருக்கக்கூடும்ங்கிறாங்க. அது யாருங்கிறதுதான் கேள்வி மேல கேள்வியா இருக்கு கோலிவுட்லே!


சஸ்பென்சை அவங்களா உடைக்குறதுக்குள்ளே இன்னும் என்னென்னா சொல்வாங்களோ? நம்ம காதிலே விழுந்ததையும் சொல்லி தொலைச்சுருவோம். நடந்துச்சுன்னா மார் தட்டிக்கலாமே! நடக்கலேன்னா...? மனுஷனுக்குதான் மறதிங்கிற பெரிய சொத்து இருக்கே, அனுபவிக்கட்டும். விடுங்ணா... (ஹிஹி)


அந்த ரெண்டாவது ஹீரோயினுக்கு இப்போதிலிருந்தே உன்னைப்பிடி, என்னைப்பிடி போராட்டமாம். பின் சந்து வழியா ப்ரியாமணி கூட, 'உள்ளேன் ஐயா' சொல்றதா தகவல். இன்னொரு பக்கத்திலேயிருந்து ஸ்ரேயாவும் பிரஷ்ஷர் கொடுக்கிறாராங்களாம். இவங்கள்ளாம் போட்டி போடுறதை பார்த்தா மாசத்துக்கு முப்பது நாளுதானேங்கிற சந்தேகமே வருது. எப்படிதான் நேரம் கிடைக்குதோ? இவங்க போட்டியெல்லாம் ஒரு பக்கம் இருக்க, 'சினேகாவை பார்க்கலாமே' என்று தளபதிகிட்டேயிருந்தே சிக்னல் கிடைச்சிருக்காம்!


ஆமாவா? ஆமாவா? ஆமாவா?


சினேகா பக்கம் கேள்வியை அனுப்பினால் 'பொறுத்திருந்து பாருங்க' என்று கண் சிமிட்டுகிறார்கள். யாராவது புலனாய்வு புலிங்க இருந்தா அந்த பக்கம் மூக்கை நுழைச்சு பாருங்கப்பா...!

நிறுவன தலைவராக விஜய்! கட்சி வேலைகள் பரபர...


அரசியல் கட்சி ஆரம்பிக்கிறார் விஜய் என்று கிளம்பிய கிசுகிசுவை தொடர்ந்து அவரை நேரில் சந்திக்கும் போது, அப்படியா? என்று கேள்வி மேல் கேள்வி எழுப்புகிறார்கள் நிருபர்கள். அவர்களுக்கெல்லாம் விஜய் சொல்கிற ஒரே பதில், "என்னுடைய பிறந்த நாளான ஜுன் 22 ந் தேதி வரைக்கும் பொறுத்திருங்க. நல்ல செய்தி சொல்றேன்" என்பதுதான்.


கட்சி துவங்குகிற விஷயத்தை தவிர வேறென்ன நல்ல செய்தியை சொல்லிவிடப் போகிறார்? இன்னொரு அதிகாரபூர்வமான செய்தியும் உலா வருகிறது. கட்சியின் நிறுவன தலைவராக மட்டுமே விஜய் இருப்பாராம். (பா.ம.க வில் ராமதாஸ் எப்படியோ, அப்படி!) நேரடியாக தலையிட மாட்டார். பொதுச்செயலாளர், தலைவர் என்ற முக்கிய பொறுப்புகளை அவரது அப்பா எஸ்.ஏ.சி பார்த்துக் கொள்வாராம்.


இப்போது எம்.ஜி.ஆர் ஃபார்முலாவுக்கு தாவியிருக்கிறார் விஜய். அதை நிரூபிக்கும் விதமாக வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடல். எழுதியிருப்பவர் கபிலன். "உணவு உடை இருப்பிடம் உழவனுக்கு கிடைக்கணும். அவன் அனுபவிச்ச மிச்சம்தான் ஆண்டவனுக்கே படைக்கணும்" இந்த வரிகளை கேட்டவுடன் சந்தோஷத்தில் தலை கால் புரியாமல் குதித்த விஜய், கபிலனை நேரில் வரச்சொல்லி பாராட்டினாராம். அப்படியே சால்வை போட்டு ஒரு பொற்கிழியும் கொடுத்திருந்தால், அரசியல் தலைவர் 'களை' வந்திருக்கும். ஹம்....?


கொ.ப.செ பதவியை யாராவது நடிகைக்கு கொடுத்தால் கலகலப்பா இருக்கும்ங்கிறது நம்ம யோசனை!

ரீமிக்ஸ் பண்ணுறேன்னு கொல்றாங்க... வடிவேலு ஆவேசம்!


தமிழ்சினிமாவில் ரீமிக்ஸ் என்ற பெயரில் நடைபெறுகிற 'இசை வதையை' கண்டிக்காத பிரபலங்களே இல்லை எனலாம். "அடுத்தவர் வாந்தியை சுவைப்பது போலதான் இந்த ரீமிக்ஸ்" என்று கடுமையான வார்த்தைகளால் சாடி இருந்தார் இசைஞானி இளையராஜா. "இனிமேல் ரீமிக்ஸ் செய்யப் போவதில்லை" என்று அறிவித்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.


இதோ - திரையுலகத்திலிருந்து ரீமிக்ஸ் கலாச்சாரத்தை நோக்கி மேலும் ஒரு கல்! எறிந்திருப்பவர் வைகைப்புயல் வடிவேலு. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வைகைப்புயல், சற்று வேகமாக சுற்றி அடித்தது வார்த்தைகளை!


தமிழ்சினிமாவில் தற்போது ஓரிரு படங்களுக்கு இசையமைத்துவிட்டாலே பெரிய இசை மேதை போல சுற்றி வருபவர்களுக்கு முன் எவ்வளவோ சாதனைகளை செய்து விட்டு அடக்கமாக இருக்கிறாரே மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்... அவர் ஒரு இமயம். இவர்களை போன்றவர்கள் இரவு பகல் பாராமல் இசையமைத்த பாடல்களை கூசாமல் எடுத்து ரீமிக்ஸ் என்ற பெயரில் கெடுத்து கொல்வது வேதனையாக இருக்கிறது. இந்த கொடுமைக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். தயவு செய்து இப்படி அடுத்தவர்களின் உழைப்பை திருடாதீர்கள். முடிந்தால் நீங்களே சுயமாக சிந்தித்து இசையமையுங்கள். அதை சிறிது காலம் கழித்து நீங்களே ரீமிக்ஸ் செய்து கொள்ளுங்கள். யார் கேட்க போகிறார்கள்? என்றார் ஆவேசமாக!


இசையமைச்சவங்க சொல்லியே கேட்கலே, இவரு சொல்லியா கேட்க போறாங்க. விடுங்க சார்...

ஏ.ஆர்.ரஹ்மான் விளையாட்டு? கத்தை கத்தையா கையிலே நோட்டு....!


கொப்புளிச்சா பன்னீரு, துப்புனா பிரசாதம்னு சும்மாவா சொன்னாங்க பெரிய மனுஷங்களை பற்றி? வேடிக்கையாக கேட்ட ஒரு விஷயத்தை சீரியஸ்சா எடுத்துகிட்டு 'புடிங்க'ன்னு மூணு கோடியை கையிலே திணிச்சுட்டு கிளம்புச்சு ஒரு குரூப்! எங்கேய்யா இந்த அதிசயம்?


ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானை நேரில் பார்த்து வாழ்த்துக்களை தெரிவிக்கணும்னு நினைச்சாங்க கனரா வங்கி அதிகாரிங்க. போன் அடிச்சதுமே புறப்பட்டு வாங்கன்னு சொல்லிட்டாராம் இசைப்புயல். போனவர்களிடம் சகஜமா பேசிட்டு இருந்தவர், 'சார், எங்களுக்கெல்லாம் லோன் கொடுக்க மாட்டீங்களா?' என்றாராம். அவ்வளவுதான்!


ஏ.டி.எம் மிஷினை விட வேகமா செயல்பட்ட அதிகாரிங்க, அங்கேயே உட்கார்ந்து அரை மணி நேரத்தில் லோன் சேங்ஷன் பண்ணினாங்களாம். கொஞ்ச நஞ்சமில்லே, மூணு கோடி! 'வேண்டாம் சார். வெளையாட்டுக்கு கேட்டேன்'னு ரஹ்மான் சமாளிச்சாலும், விடாம செக்கை கையிலே திணிச்சுட்டுதான் கிளம்புனாங்களாம்.


நமக்கெல்லாம் இப்படி ஒரு வேகத்தோட செயல்படுமா பேங்க்? பின் மண்டையிலே பெட்ரோலை ஊத்திகிட்டு யோசிக்க வேண்டிய கேள்வி!

மீடியா அது பற்றி கொஞ்சம் யோசிக்கணும்! நயன்தாரா அட்வைஸ்...


'பிரபுதேவாவுக்கும் நயன்தாராவுக்கும் காதல், விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள்' என்று எல்லா பத்திரிகைகளும் எழுதிவிட்டன. (நம்மை தவிர) இது குறித்து எந்த பதிலுமே சொல்லவில்லை சம்பந்தப்பட்ட இருவரும். முக்கியமாக பிரபுதேவா கூட இது பற்றி கருத்து சொல்ல விரும்பாமல் ஒதுங்கிக் கொண்டார். மீனாவை காதலிக்கிறார் என்று முன்பு ஒரு முறை கிளப்பிவிட்ட பத்திரிகைகள் தானாகவே அடங்கி போகிற வரை அதுபற்றி அவர் பேசியதில்லை. அதே ஸ்டைலைதான் இந்த முறையும் கடைபிடித்தார்.


ஆனால் பிரபுதேவா பேசாவிட்டால் என்ன? நாம் பேசிவிடுவோம் என்று முடிவுக்கு வந்த நயன்தாரா, ரொம்ப தெளிவாக விளக்கியிருக்கிறார். என்னவென்று?


'நானும் அவரும் நல்ல நண்பர்களாகதான் பழகி வருகிறோம். எங்களுக்குள் காதல், கல்யாணம் என்று வித விதமாக எழுதி புழுதியை தூற்றுகிறது மீடியா. என்னை எழுதுவது பற்றி கூட எனக்கு கவலையில்லை. ஆனால் மாஸ்டருக்கு திருமணம் ஆகி மனைவி குழந்தைகள் என்று ஒரு குடும்பம் இருக்கிறது. அதற்காகவாவது இதுபோல எழுதுவதை இனிமேல் குறைத்துக் கொள்ள வேண்டும்' என்று கூறியிருக்கிறார்.


இந்த ஆகாத லவ்வுக்கு ஒரு முற்றுப்புள்ளியை வைங்கப்பா...!

தனுஷ் வீட்டிலிருந்து ஸ்ரேயாவுக்கு சாப்பாடு!


ரஜினியின் ராகவேந்திரா மண்டபத்தில், மருமகன் தனுஷ் நடிக்கும் 'குட்டி' படப்பிடிப்பு நடந்தது. (வாடகையிலே சலுகை உண்டுங்களா?) ஸ்ரேயா மணக்கோலத்தில் இருக்க, முன் வரிசையில் தனுஷ்! இரண்டு பேரு கண்ணுலேயும் குற்றால சீசன். அப்படியே மாலையை கழட்டி எறிஞ்சுட்டு ஸ்ரேயா ஓடுற மாதிரி சீன்!.


ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜுனியர் ஆர்ட்டிஸ்டுங்க மேடைக்கு முன்னாடியும், நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கேமிராவுக்கு பின்னாடியும் இருக்க, நாலைந்து முறை மாலையை கழற்றி எறிந்துவிட்டு ஓடினார் ஸ்ரே! யாரடி நீ மோகினி படத்தை இயக்கிய மித்ரன் ஆர்.ஜவகர் இயக்கும் இப்படத்தில் இது ரொம்ப சென்ட்டிமென்ட் சீன் மட்டுமல்ல, ரொம்ப முக்கியமான சீனும் கூட. டேக் நிறைய போனாலும் பர்பெக்ஷன் முக்கியம். விடக் கூடாது என்ற முடிவோடு திரும்ப திரும்ப எடுத்துக் கொண்டிருந்தார் ஜவகர்.


இந்த ஒரு காட்சிக்கே காலை நேரம் சரியாகிவிட்டது. லஞ்ச் நேரம். அவரவர் தகுதிக்கேற்ப இடங்களை தேர்வு செய்து அமர்ந்து கொள்ள, ஸ்ரேயாவுக்கும் சேர்த்து தனுஷ் வீட்டிலிருந்து சாப்பாடு வந்து சேர்ந்தது. ஆயிரம் ஜுனியர் ஆர்ட்டிஸ்டுகளுக்கும் பரிமாற வேண்டுமே? புரடக்ஷன் டீம் பம்பரமாக வேலை பார்த்தது. ஒளிப்பதிவாளர், ஸ்டில்கிராபர் என்று கேமிரா குழு ஒரு பக்கம் உட்கார்ந்தது. ஒருவர் ஓடிவந்து தட்டுகளில் பொறியல் சமாச்சாரங்களை வைத்தார். 'சார், நீங்களா? பரவாயில்லை, வெயிட் பண்றோம். புரடக்ஷன் டீம் வரட்டுமே' என்று நெளிந்தது கேமிரா டீம். 'பரவாயில்லே, சாப்பிடுங்க' என்று விடாமல் பரிமாறியது....?


வேறு யாருமல்ல, படத்தின் தயாரிப்பாளர் ரமணா! படம் எடுக்க வந்தா என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கு?

ஜீவாவின் அடுத்தது என்ன?


"கச்சேரி" படத்தில் நடித்து வரும் ஜீவா அடுத்து "சிங்கம் புலி" என்ற படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இந்தப் படத்தை எஸ்.பி.ஜனநாதனிடம் உதவியாளராக இருந்த சாய்ரமணி இயக்குகிறார். இதில் ஒரு வேடத்திற்கு ஜோடியாக நடிப்பவர் திவ்யா.