Monday, June 8, 2009

தோல்விக்கு நானா காரணம்? தமன்னா ஆவேசம்!


ஆந்தைய பிடிக்க வலை வீசினா, அடிஷனலா கோட்டானும் கிடைச்ச மாதிரி ஒரு பதில்! சொன்னவர் நம்ம தமன்னா. நீங்க ராசியில்லாத நடிகைங்கிறாங்களே? கேட்ட அடுத்த வினாடியே ஜிவ்வுன்னு கோவம் வருது முகத்தில். ஆனாலும் சமாளித்துக் கொண்டு, 'அப்படின்னா என்னுடன் கேடி படத்திலே அறிமுகம் ஆன இலியானாவையும் அப்படி சொல்லுவீங்களா?' என்றார்! (அதானே?)

தெலுங்குலே நம்பர் ஒன் இப்போ இலியானாதான். தமன்னாவுக்கு இப்போதான் தெலுங்கு தேச கதவுகளை 'கிறீச்' சவுண்டோடு திறந்திருக்கிறாங்க. நான் நடிச்சுதான் கேடி ஓடலைன்னா, இலியானா நடிச்சு ஓடியிருக்கணுமே? இது தமன்னாவோட வாதம். அதுக்கு பிறகு நான் நடிச்ச சில படங்கள் ஓடாம போனா அதுக்கு நான் மட்டும் எப்படி காரணம் ஆக முடியும்? அயன் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதுக்கு நான் மட்டுமா காரணம்? அப்படி நான் நடிச்ச மற்ற படங்கள் ஓடாமல் போனதற்கும் நான் மட்டும் காரணமில்லே. (ஷாமும் இதையேதான் சொல்றாரு)

கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்து இன்னைக்கு ஒரு இடத்தை பிடிச்சிருக்கேன். ராசியில்லாத நடிகைன்னா இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாதே என்றார் ஆவேசத்தோடு. அட, ஆமாம்ல! நல்ல கௌப்புறாங்கப்பா பீதிகள...!


No comments:

Post a Comment