Sunday, June 14, 2009

அஜீத், விஜய் பட இயக்குனர்கள்...? குழப்பத்தில் கோடம்பாக்கம்!


விட்டா உச்சி மாநாட்டை கூட்டி, நச்சுன்னு நச்சுன்னு விவாதிப்பாங்க போலிருக்கு. அப்பவும் ஒரு முடிவுக்கு வருவாங்களாங்கறதுதான் டவுட்! வர்ற செய்திகளையும் நம்பறதா வேணாமான்னு ஒரே குழப்பம். அஜீத்தோட ஐம்பதாவது படத்தை சீமான் இயக்குறாரு தெரியுமான்னு பீதியை கிளப்புறாங்க. இந்த பக்கம் திரும்பினா, விஜயோட ஐம்பதாவது படத்தை பேரரசு இயக்கலே தெரியுமான்னு நிம்மதிக்கு உத்தரவாதம் தர்றாங்க. என்னதான் நடக்குது கோடம்பாக்கத்திலே?

முதல்ல தல மேட்டருக்கு வருவோம். நீண்ட காலமாகவே தயாரிப்பாளர் தாணு, அஜீத்திடம் கால்ஷீட் கேட்பதாக தகவல். இந்த நேரத்திலே சீமானும் தாணுவிடம் ஒரு கதை சொன்னாராம். கதை பிடித்திருந்ததால் 'விக்ரம், அல்லது அஜீத்துடன் பேசுறேன்' என்றாராம் தாணு. அதற்குள் அஜீத்தின் ஐம்பதாவது படத்தை சீமான் இயக்குகிறார் என்று செய்திகள் கசிய துவங்கிவிட்டது. ஒரு சிங்கிள் பைசா கூட இன்னும் யாருக்கும் கைமாற வில்லை என்கிறது கோடம்பாக்கத்து பட்சி.

இந்த பக்கம் விஜயின் 50 வது படத்தை இயக்குவது யாருன்னு பந்தயம் போட்டு, தெருவுக்கு தெரு சூதாட்ட கிளப்பே நடத்துவாங்க போலிருக்கு. சங்கிலி முருகன் தயாரிக்கிறார்னு ஒரு நியூஸ். படிச்சிட்டு பக்கத்தை திருப்பறதுக்குள்ளே, இல்லையில்லை... இந்த படத்தை ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிக்கிறார்னு இன்னொரு நியூஸ். பேரரசு, பேரு தெரியாத அரசுன்னு ஒரு டஜன் டைரக்டரோட பேரை எழுதிட்டாங்க. இப்போ கடைசியா ஒரு தகவல் உலவுது.

விஜயோட ஐம்பதாவது படத்தை பூபதி பாண்டியன் இயக்குகிறாராம். கதை, வசனம் மட்டும் எஸ்.பி.ராஜ்குமார் என்கிறது கோடம்பாக்கம். இதுவாவது உண்மையாகி இந்த மேட்டருக்கு ஒரு முற்றுப்புள்ளி வைங்கப்பா.

No comments:

Post a Comment