Monday, June 8, 2009

புதுப்படங்களே, போ...! த்ரிஷாவின் பாலிவுட் ஆசை?


கூண்டுக்கிளியை திறந்துவிட வேண்டியது. பிறகு 'போயிருச்சே போயிருச்சே'ன்னு புலம்ப வேண்டியது. "தமிழா, இது அழகா?"ன்னு கேட்கறதுக்கு முன்னாடி விஷயம் என்னன்னு சொன்னாதானே புரியும்? அசின் பாலிவுட், ஹாலிவுட்டுன்னு போயிட்டார். அவர் சென்னைக்கு வருவதே தலைப்பு செய்தியாகிவிட்டது. அந்தளவுக்கு அவரது வருகையை ஆவலோட எதிர்பார்க்கிறான் தமிழன். 'திரும்ப தமிழ் படங்களில் எப்போ நடிப்பீங்க?' என்று கேட்டு, 'கட்டாயம் நடிப்பேன்'னு அவரு சொன்னதும்தான் திருப்தியடையுது அவன் மனசு.

இதோ- அடுத்த கிளியோட கூண்டும் திறக்கப் போவுது. பறக்கப் போவது த்ரிஷா! தமிழில் ஆடுகளம், விண்ணை தாண்டி வருவாயா, தெலுங்கில் கோபிசந்துடன் ஒரு படம். இதுதான் த்ரிஷாவின் கைவசப் படங்கள். இந்த படங்களை முடிச்சிட்டு அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஆஃபர்கள் குவிகிறதாம். ஆனால், எந்த படத்தையும் தற்போது ஒப்புக் கொள்ளும் மன நிலையில் இல்லையாம் த்ரிஷ்!

ஏன்? அவரது பார்வையெல்லாம் பாலிவுட்டில் நிலை கொண்டுள்ளது என்கிறார்கள். அசினின் வெற்றியும், அவர் வாங்குகிற சம்பளமும் த்ரிஷாவின் மனசில் பாலிவுட் ஆசையை தூண்டிவிட்டிருக்கிறது. தனக்கு வேண்டியவர்கள் மூலம் நல்ல இந்தி படங்கள் அமைந்தால் நடிக்கலாம் என்று தூது விட்டிருக்கிறாராம். இந்த தீவிர தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தால்தான் அவர் இங்கேயே நடிப்பாரா, அல்லது இந்திக்கு போவாரா? என்பது முழுமையாக தெரிய வரும்.

No comments:

Post a Comment