Monday, June 8, 2009

சுஹாசினியின் 'சுருக்' விமர்சனம்! லாரன்ஸ் ஆத்திரம்


தடாலடி விமர்சனம் இல்லை சுஹாசினியுடையது. ஆனால் ராஜாதிராஜா படத்தை விமர்சிக்கும் போது மட்டும் என்னாச்சோ, கொஞ்சம் எல்லை மீறிவிட்டார். இருபது வருஷத்துக்கு முன்னாடி வந்திருக்க வேண்டிய படம். லாரன்சும், ஷக்தி சிதம்பரமும் சேர்ந்து கூத்தடித்திருக்கிறார்கள் என்று சொல்லப் போக, கடும் கோபத்திலிருக்கிறது ரா.ரா யூனிட்.

ஹாசினி டைம்ஸ் என்ற நிகழ்ச்சியில் விமர்சனம் என்ற பெயரில் இப்படத்தை கிழித்து தொங்க போட்ட சுஹாசினி மேல் வழக்கு தொடருகிற அளவுக்கு போய்விட்டார் அப்படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனருமான ஷக்தி சிதம்பரம். லாரன்சுக்கு நடிப்பே வரவில்லை என்று சுஹாசினி சொன்னதுதான் சுர்ரென்று கோபத்தை வரவழைத்திருக்கிறது ஹீரோவுக்கு. "கொஞ்சம் ஓவராதான் பேசுறாங்க" என்கிறார் லாரன்சும்.
இப்படி இவர் பேசியதால் தியேட்டரில் வசூல் குறைஞ்சிருக்கு, அவர் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்திலும், இயக்குனர்கள் சங்கத்திலும் புகார் கொடுத்திருக்கிறார் ஷக்தி சிதம்பரம். இதற்கிடையில் என்ன நடந்திச்சுன்னு தெரியலே, சப்பென்று ஆகிவிட்டது சமாச்சாரம். ஆறுமுகம் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தவர், மேடையில் சுஹாசினி பற்றி ஏதாவது பேசுவார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு செம ஏமாற்றம். பரத்திற்கும் ஆறுமுகம்தான். அவருக்குள்ளே ரஜினி இருக்கார், கமல் இருக்கார், விஜய் இருக்கார்னு அவர் சொல்லிக் கொண்டே போக, அதுவும் நல்லாதான்ய்யா இருந்திச்சு....

No comments:

Post a Comment