Sunday, June 14, 2009

சம்பள இழுபறி...? சினேகா ஃபெயில்!


சினேகாவுக்கும் பாவனாவுக்கும் செம போட்டி. இறுதி வெற்றி யாருக்கு? கடந்த வார ரேஸ் கேள்வி இது. இதோ ரிசல்டே வந்திருச்சு. 'அசல்' படத்தில் தல அஜீத்தோட நடிக்கிற வாய்ப்பு பாவனாவுக்குதானாம். கடந்த சில மாதங்களாகவே இழுபறியாக இருந்த ஒரே விஷயம் படத்திலே வர்ற இரண்டாவது ஹீரோயினுக்கு யாரை செலக்ட் பண்ணலாம்? என்பதுதான். மம்தாவில் ஆரம்பிச்சு, மார்க்கெட்லயே இல்லாத ஹீரோயின் வரைக்கும் தேடி உதட்டை பிதுக்கிய டைரக்டர் சரண், இறுதியாக யோசிச்ச நடிகைகள்தான் சினேகாவும், பாவனாவும்.

ஒரே நேரத்தில் இரண்டு பேரிடமும் பேச்சு வார்த்தைகளை துவங்கினார்கள். இருவரில் யாரு கிடைச்சாலும் ஓ.கே என்ற அஜீத்தின் அனுமதியோடு நடந்த பேச்சு வார்த்தையில் எல்லா விஷயத்துக்கும் விட்டுக் கொடுத்தாராம் பாவனா. ஆனால் சம்பள விஷயத்தில் கொஞ்சம் கறாராகவே இருந்தாராம் சினேகா.


பாவனாவுக்கு அட்வான்ஸ் கொடுத்து இழுபறிக்கு முடிவு கட்டியதால், இம்மாதம் படப்பிடிப்பை துவங்கப் போகிறார்கள். முதல் கட்ட படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெறுகிறதாம். ஏன் மலேசியா? ஒருவேளை பில்லா சென்ட்டிமென்டோ என்னவோ!

No comments:

Post a Comment