Sunday, May 31, 2009

நான் மட்டுமா காரணம்? ஆர்யா ஆத்திரம்!


அறிந்தும் அறியாமலும், பட்டியல் படங்களுக்கு பிறகு ஆர்யா நடித்த ஒரு படமும் ஓடவில்லை. ஆனால், இரண்டு கோடி சம்பளத்தை குறைப்பதில்லை என்பதில் தீர்மானமாக இருக்கிறாராம். சமீபத்தில் ஒரு விழாவில் கலந்து கொண்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவரும், திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவரும் இந்த விஷயத்தை குறிப்பிட, 'இதே வேலையா போச்சு இவங்களுக்கு' என்று கண் சிவக்கிறாராம் ஆர்யா.


உயிரை கொடுத்து நடிக்கிறேன். உச்சி வெயில்னு பார்க்காம ஓடுறேன். என்னை போயி இவ்வளவு சம்பளம் வாங்குறீயேன்னு சாபம் கொடுக்கலாமா? நான் நடிச்ச படம் ஓடலேன்னா அதுக்கு நான் மட்டுமா காரணம்? என்று நெருக்கமானவர்களிடம் சொல்லி இவர் பிதற்றுவது ஐயோ பாவமாக இருக்கிறதாம்.


இதற்கிடையில் மீண்டும் கூட்டு சேர ஆசைப்பட்ட பிதா இயக்குனருக்கு ஆர்யா சொன்ன பதில், 'ஆளை விடுங்க சாமீய்' கதை கேட்கிற விஷயத்தில் இன்னும் கவனமாக இருக்க வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறார். அதற்காக ஒரு அறிவாளி கூட்டத்தை தயார் செய்யும் வேலையில் இருக்கிறாராம். இப்போதான் அலாரம் வச்சு எழுப்புது விதி!

No comments:

Post a Comment