Sunday, May 31, 2009

ஏ.ஆர்.ரஹ்மான் விளையாட்டு? கத்தை கத்தையா கையிலே நோட்டு....!


கொப்புளிச்சா பன்னீரு, துப்புனா பிரசாதம்னு சும்மாவா சொன்னாங்க பெரிய மனுஷங்களை பற்றி? வேடிக்கையாக கேட்ட ஒரு விஷயத்தை சீரியஸ்சா எடுத்துகிட்டு 'புடிங்க'ன்னு மூணு கோடியை கையிலே திணிச்சுட்டு கிளம்புச்சு ஒரு குரூப்! எங்கேய்யா இந்த அதிசயம்?


ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானை நேரில் பார்த்து வாழ்த்துக்களை தெரிவிக்கணும்னு நினைச்சாங்க கனரா வங்கி அதிகாரிங்க. போன் அடிச்சதுமே புறப்பட்டு வாங்கன்னு சொல்லிட்டாராம் இசைப்புயல். போனவர்களிடம் சகஜமா பேசிட்டு இருந்தவர், 'சார், எங்களுக்கெல்லாம் லோன் கொடுக்க மாட்டீங்களா?' என்றாராம். அவ்வளவுதான்!


ஏ.டி.எம் மிஷினை விட வேகமா செயல்பட்ட அதிகாரிங்க, அங்கேயே உட்கார்ந்து அரை மணி நேரத்தில் லோன் சேங்ஷன் பண்ணினாங்களாம். கொஞ்ச நஞ்சமில்லே, மூணு கோடி! 'வேண்டாம் சார். வெளையாட்டுக்கு கேட்டேன்'னு ரஹ்மான் சமாளிச்சாலும், விடாம செக்கை கையிலே திணிச்சுட்டுதான் கிளம்புனாங்களாம்.


நமக்கெல்லாம் இப்படி ஒரு வேகத்தோட செயல்படுமா பேங்க்? பின் மண்டையிலே பெட்ரோலை ஊத்திகிட்டு யோசிக்க வேண்டிய கேள்வி!

No comments:

Post a Comment