Sunday, May 31, 2009

மீடியா அது பற்றி கொஞ்சம் யோசிக்கணும்! நயன்தாரா அட்வைஸ்...


'பிரபுதேவாவுக்கும் நயன்தாராவுக்கும் காதல், விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள்' என்று எல்லா பத்திரிகைகளும் எழுதிவிட்டன. (நம்மை தவிர) இது குறித்து எந்த பதிலுமே சொல்லவில்லை சம்பந்தப்பட்ட இருவரும். முக்கியமாக பிரபுதேவா கூட இது பற்றி கருத்து சொல்ல விரும்பாமல் ஒதுங்கிக் கொண்டார். மீனாவை காதலிக்கிறார் என்று முன்பு ஒரு முறை கிளப்பிவிட்ட பத்திரிகைகள் தானாகவே அடங்கி போகிற வரை அதுபற்றி அவர் பேசியதில்லை. அதே ஸ்டைலைதான் இந்த முறையும் கடைபிடித்தார்.


ஆனால் பிரபுதேவா பேசாவிட்டால் என்ன? நாம் பேசிவிடுவோம் என்று முடிவுக்கு வந்த நயன்தாரா, ரொம்ப தெளிவாக விளக்கியிருக்கிறார். என்னவென்று?


'நானும் அவரும் நல்ல நண்பர்களாகதான் பழகி வருகிறோம். எங்களுக்குள் காதல், கல்யாணம் என்று வித விதமாக எழுதி புழுதியை தூற்றுகிறது மீடியா. என்னை எழுதுவது பற்றி கூட எனக்கு கவலையில்லை. ஆனால் மாஸ்டருக்கு திருமணம் ஆகி மனைவி குழந்தைகள் என்று ஒரு குடும்பம் இருக்கிறது. அதற்காகவாவது இதுபோல எழுதுவதை இனிமேல் குறைத்துக் கொள்ள வேண்டும்' என்று கூறியிருக்கிறார்.


இந்த ஆகாத லவ்வுக்கு ஒரு முற்றுப்புள்ளியை வைங்கப்பா...!

No comments:

Post a Comment