Sunday, May 31, 2009

லவ்வும் இல்லே, ஒன்னும் இல்லே, ஆளை வுடுங்கப்பா!


ஐம்பது வயசு ஆளைக் கூட, 'அமலா போனா என்ன, ஒரு விமலா இருக்காங்களே?' என்று சந்தோஷப்பட வைத்த விமலா ராமன், கண்ணிலே கருவளையம் விழுற அளவுக்கு கவலையிலே ஆழ்ந்திருந்தார். எல்லாமே போன மாசம் வரைக்கும்தான். இந்த மாசம் விமலா, இன்னோரு ஆப்பிள் அமலா!


கருவளையத்துக்கு காரணம் என்ன? அது காணாமல் போன மாயம்தான் என்ன? தமிழில் ஒரு படமும் தேறாமல் போனதால் தெலுங்குக்கு போனார் மம்தா. அங்கேதான் இவருக்கும் வருணுக்கும் பிரண்ஷிப்! போதாதா?


பொறியை அள்ளி போகியிலே போட்ட மாதிரி, இரண்டு பேரையும் சேர்த்து வச்சு ரவுண்டு கட்டியது மீடியா. 'அவருக்கும் எனக்கும் காதலும் இல்லே, கண்றாவியும் இல்லே'ன்னு தனித்தனியா பேட்டி கொடுத்தாலும் விடாம துரத்திய மீடியா, லவ் லவ் என்று மறுபடியும் மறுபடியும் மத்தாப்பூ கொளுத்த, பயங்கர கோவாச்சு வந்திருச்சு விமலாவுக்கு!


வருணையும் வரவழைத்து பக்கத்தில் வச்சுகிட்டு தெளிவா புரிய வச்சாராம் தெலுங்கு மீடியாவுக்கு. 'எனக்கும் இவருக்கும் லவ்வு இல்லே, ஏன் பிரன்ட்ஷிப் கூட இல்லே. ஒரு படத்திலே நடிச்சோம். இனிமே அதுக்கு கூட வாய்ப்பு இல்லே. போயிட்டு வர்றீங்களா' என்றாராம் பொங்க பொங்க! இப்போதைக்கு பேனாவை மூடி வச்சிட்டு, வேறொரு கிசுகிசுவுக்காக வெயிட் பண்றாங்க.


மாட்லாடுற ஏரியாவிலே மறுபடியும் மாட்டுமா மல்லிப்பூ?

No comments:

Post a Comment