Sunday, May 31, 2009

புரட்சித்தளபதிக்கு சம்பளம் நவ கோடிகளாம்!


படம் டப்பா என்றாலும் முதல் பத்து நாட்கள் கலெக்ஷனுக்கு உத்திரவாதம் கொடுக்கிற ஹீரோக்கள் மூவரில் விஷாலும் ஒருவர்! மற்ற இருவர் யார் யார் என்பதை உங்களின் பேரரறிவிற்கே விட்டு விடுகிறோம். இந்த ஒரு காரணத்திற்காகவே 'வச்சுக்கோ...' என்று விஷாலுக்கு வாரியிறைக்கிறார்களாம் தயாரிப்பாளர்கள்.


போக்கிரி பட தயாரிப்பாளர் ரமேஷ் தெலுங்கில் பெரிய்ய்ய்ய்ய்ய முதலீடு செய்திருக்கிறாராம். மூன்று முன்னணி ஹீரோக்களை வைத்து தலா இருபத்தைந்து கோடி பட்ஜெட்டில் மூன்று படங்களை எடுத்து வருகிறாராம். இவர்தான் விஷாலை வைத்து தமிழில் புதிய படத்தை தயாரிக்கிறார். புரட்சித்தளபதிக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா? நவ கோடிகளாம்!


தோரணை படத்தின் ரிசல்ட் என்னவென்றே தெரியாத நிலையில் இப்படி ஒரு சம்பளத்தை கொடுக்க எப்படி முன்வந்தார் ரமேஷ்? வேறொன்றுமில்லை, நாம் முதல் பாராவில் சொன்ன ஃபார்முலாதான்! வியாபார நுணுக்கங்களை விடுங்கள்... பெரும் பிரயத்தனம் எடுத்து ரீமாசென்னுக்கும் அட்வான்ஸ் கொடுத்துவிட்டார்களாம். விஷால் ரசிகர்களுக்கு இதுதான் லேட்டஸ்ட் இனிப்பு. இன்னொரு ஹீரோயினாக முன்பே கமிட் செய்யப்பட்டவர் ஸ்ரேயா என்பது ரசிகர்களுக்கு தெரிந்த விஷயம்தான். ஒரே படத்தில் முன்னாள் அண்ணியும்... இந்நாள் அண்ணியும்!

No comments:

Post a Comment